இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் தொடர் போராட்டம்: 1,500+ பேர் கைது

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, சென்னை எழும்பூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள். | படம்: ம.பிரபு |

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, சென்னை எழும்பூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள். | படம்: ம.பிரபு |

Updated on
1 min read

சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி சென்​னை​யில் நேற்று 5-வது நாளாக போராட்​டம் நடத்​திய 1,500-க்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் டிச.26 முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது.

நேற்று 5-வது நாளாக எழும்​பூரில் உள்ள வட்​டாரக் கல்வி அலு​வல​கம் முன்பு 1,500-க்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்​பத்​தினருடன் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்து 15 மண்​டபங்​களில் தங்க வைத்​தனர்.

ஆசிரியர்​களின் இந்த தொடர் போராட்​டத்​தால் போலீ​ஸாருக்கு ரூ.3 லட்​சம் வரை செல​வாகி​யுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. போராட்​டம் குறித்து எஸ்​எஸ்​டிஏ இயக்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் ஜே.​ராபர்ட் கூறும்​போது, “எங்​களின் நியாய​மான கோரிக்​கையை முதல்​வர் நிறைவேற்​றித் தரவேண்​டும்.

அது​வரை போராட்​டம் தொடரும். தெருத்​தெரு​வாக ஆசிரியர்கள் சுற்​றிவந்து போராடும் நிலை இருக்​கிறது. ஆசிரியர்​களை இது​போல அவமானப்​படுத்​தும் செயல் வேறு எது​வும் இருக்​காது. கடுமை​யான போராட்​டங்​களுக்​குள் எங்​களை இறக்​கு​வதே காவல்துறைதான்’’ என்றார்.

<div class="paragraphs"><p>சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, சென்னை எழும்பூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள். | படம்: ம.பிரபு |</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 31 டிசம்பர் 2025

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in