​முதல்வர் விஜய், உதயநிதி தொடர்பான தேர்தல் வழக்குகளை அவசரமாக விசாரிக்க உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: தமிழக முதல்​வர் விஜய், எதிர்​க்கட்​சித்​தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் உள்​ளிட்​டோருக்கு எதி​ராக தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள தேர்​தல் வழக்​கு​களை விரைந்து விசா​ரித்து முடிக்க சென்னை உயர் நீதி​மன்​றத்​திற்கு உத்​தர​விடக்​கோரிய மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. இந்​தக் கோரிக்கை தொடர்​பாக உயர் நீதி​மன்​றத்தை நாட மனு​தா​ரருக்கு அறி​வுறுத்​தி​யுள்​ளது.

மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​டப்​படி எம்​எல்​ஏ-க்​கள், எம்​பி-க்​கள் வெற்​றியை எதிர்த்து உயர் நீதி​மன்​றங்​களில் தேர்​தல் வழக்​கு​கள் தாக்​கல் செய்​யப்​படு​கின்​றன. தேர்​தல் முடிவு​கள் வெளி​யான 45 நாட்​களுக்​குள் இந்த வழக்​கு​களை தாக்​கல் செய்ய வேண்​டும். அந்த வகை​யில் தமிழகத்​தில் அண்​மை​யில் நடை​பெற்று முடிந்த சட்​டமன்​றத் தேர்​தலுக்​குப் பின்​னர், தேர்​தல் தொடர்​பாக பல வழக்​கு​கள் தொடரப்​பட்​டுள்ளன.

குறிப்​பாக தமிழக முதல்​வர் விஜய், எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜூ​னா, செங்​கோட்​டையன், மரிய வில்​சன் ஆகியோ​ருக்கு எதி​ராக​வும் தேர்​தல் வழக்​கு​கள் தொடுக்​கப்​பட்​டுள்​ளன. அதே​போல, தேர்​தலில் தோல்​வியடைந்த முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஷ், ஒரு வாக்கு வித்​தி​யாசத்​தில் தோல்​வியடைந்த முன்​னாள் அமைச்​சர் பெரிய கருப்​பன் ஆகியோர் அவர்​களை எதிர்த்து போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற வேட்​பாளர்​களுக்கு எதி​ராக தேர்​தல் வழக்கை தாக்​கல் செய்​துள்​ளனர். இவ்​வாறு மொத்​தம் 54 தேர்​தல் வழக்​கு​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன.

இந்த வழக்​கு​களை விரைந்து விசா​ரிக்க உத்​தர​விடக்​கோரி தூத்​துக்​குடி மாவட்​டத்தை சேர்ந்த வெங்​க​டாசலபதி என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் ரிட் மனுவை தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு உச்ச நீதி​மன்​றத்​தின் தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் மற்​றும் நீதிப​தி​கள் ஜாய்​மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, மனு​தா​ரர் வெங்​க​டாசலபதி தரப்பு ஆஜராகி, தமிழகத்​தில் இம்​முறை 54 தேர்​தல் வழக்​குள் தொடரப்​பட்​டுள்​ளன, இது கடந்த காலங்​களின் எண்​ணிக்​கையை விட அதி​கம் ஆகும். எனவே, தேர்​தல் வழக்​கு​களை விரைந்து விசா​ரித்து முடிக்க உரிய உத்​தரவை சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு பிறப்​பிக்க வேண்​டும் என கோரிக்கை வைக்​கப்​பட்​டது.

அப்​போது தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், “தமிழகத்​தில் 54 தேர்​தல் வழக்​கு​கள் தொடரப்​பட்​டுள்​ள​தா? தமிழகத்​தில் மொத்​தம் எத்​தனை தொகு​தி​கள் உள்​ளன?” என வின​வி​னார். அதற்​கு, 234 தொகு​தி​கள் இருப்​ப​தாக மனு​தா​ரர் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து நீதிப​தி​கள், “இந்த மனு மீது எந்த உத்​தர​வும் பிறப்​பிக்க முடி​யாது, ஆனால் இந்த கோரிக்கை தொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றத்தை மனு​தா​ரர் நாடலாம்​” என்​று கூறி மனுவை தள்​ளு​படி செய்​து உத்​தரவிட்​டனர்​.

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: ஒருவர் உயிரிழப்பு; 120 பேர் மருத்துவமனையில் அனுமதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in