

சென்னை: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள சசிகலா, சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்.
முதல்கட்டமாக 21 வேட்பாளர்கள், அடுத்து 38 வேட்பாளர்களை அறிவித்த நிலையில், நேற்று 5 பேர் கொண்ட 3-ம் பட்டியலை சசிகலா வெளியிட்டுள்ளார்.
மொத்தத்தில் சசிகலா கட்சி 64 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சசிகலா தரப்பில் கூட்டணி கட்சிகளுக்கு 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டணியில் பாமக சார்பில் இதுவரை 25 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.