அரசால் ஏற்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசாணை கேட்டு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கைது நடவடிக்கைக்கு ஏஐடியுசி கண்டனம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கக் கோரி, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள். | படம்: ம.பிரபு |

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கக் கோரி, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள். | படம்: ம.பிரபு |

Updated on
1 min read

சென்னை: அரசு ஏற்​றுக் கொண்ட கோரிக்​கைகளுக்கு அரசாணை வழங்​கும் வரை டிச.8-ம் தேதிமுதல் கால​வரையற்ற காத்​திருப்பு போராட்டம் நடத்​தப்​படும் என தமிழ்​நாடு ஊரக வளர்ச்​சித் துறை தொழிலாளர்கள் சங்​கம் அறி​வித்​திருந்​தது.

அதன்​படி ஊரக வளர்ச்​சித் துறை இயக்​குநர் அலு​வல​கம் அமைந்​துள்ள சைதாப்​பேட்டை பனகல் மாளிகை அருகே தொழிலா​ளர்​களின் காத்​திருப்பு போராட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்​கியது.

தூய்​மைப் பணி​யாளர்​கள் மற்​றும் சுகா​தார ஊக்​குநர்​களுக்கு குறைந்​த​பட்ச ஊதி​யம் வழங்​கப்பட வேண்​டும், தற்​காலிக பணி​யாளர்​களுக்கு இஎஸ்ஐ மூலம் மருத்​துவ வசதி, மேல்​நிலைத் தொட்டி இயக்​கு​வோருக்​கும் தூய்​மைப் பணி​யாளர்​களுக்​கும் சத்​துணவு ஊழியர்​களுக்கு இணை​யான சலுகைகள், பள்ளி தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு உட்பட அரசால் ஏற்​கப்​பட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்​று​வது தொடர்​பான அரசாணை​களை உடனடி​யாக வெளி​யிட வேண்டும் என்று தொழிலா​ளர்​கள் கோஷமிட்​டனர். கால​வரையற்ற போராட்​டத்​தில் ஈடு​பட்ட அவர்​களை போலீ​ஸார் கைதுசெய்​தனர்.

ஏஐடி​யுசி கண்​டனம்:

இந்​நிலை​யில், காத்​திருப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்ட தொழிலா​ளர்​களை கைது செய்​திருப்​ப​தற்கு தமிழ்​நாடு ஏஐடி​யுசி கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக அதன் பொதுச்​செய​லா​ளர் ம.ரா​தாகிருஷ்ணன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “போ​ராட்​டத்​தில் ஈடு​பட்ட தொழிலா​ளர்​களை​யும், இதில் பங்​கேற்க பல்​வேறு மாவட்​டங்​களி​லிருந்து வந்த தொழிலா​ளர்​களை வரும் வழி​யிலும் காவல் துறை​யினர் கைது செய்​திருப்​பது கண்​டனத்​துக்​குரியது.

இது ஜனநாயக உரிமை​யைப் பறிக்​கும் செயல். அரசால் ஏற்​கப்​பட்ட கோரிக்​கைகளை கூட நிறைவேற்​றாமல் இருப்​பது நியாய​மானது அல்ல. தொழிலா​ளர்​களின் கோரிக்​கைகளை உடனடி​யாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்​டும்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

<div class="paragraphs"><p>தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கக் கோரி, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள். | படம்: ம.பிரபு |</p></div>
சென்னையில் ஒரே நாளில் 71 இண்டிகோ விமான சேவை ரத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in