கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம்: நதிகள் இணைப்பு சங்கம் குற்றச்சாட்டு

கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம்: நதிகள் இணைப்பு சங்கம் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விவசாயிகளிடம் லஞ்​சம் கேட்​கப்​படு​வ​தாக தேசிய தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு சங்​கம் குற்​றம்​சாட்​டி​யுள்​ளது.

இது தொடர்​பாக தமிழக உணவுப் பொருள் வழங்​கல், கூட்​டுறவுத் துறை செயலருக்கு தேசிய தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் பி.அய்​யாகண்ணு அனுப்​பி​யுள்ள மனு​: தமிழக விவசாயிகள் நெல்​லுக்கு லாபகர​மான விலை கிடைக்​காத​தால் மிகுந்த சிரமத்தில் உள்​ளனர்.

இந்த நிலை​யில், அறு​வடை செய்த நெல்லை அரசு கொள்​முதல் நிலை​யங்​களுக்கு கொண்​டு​ சென்றால் அங்​குள்ள அரசு அதி​காரி​கள் அவற்றை வாங்க மறுக்​கின்​றனர்.

அதே​நேரம், 40 கிலோ மூட்​டைக்கு ரூ.80 லஞ்​சம் கொடுத்​தால் கொள்​முதல் செய்​கின்றனர். கூட்​டுறவு சங்​கத்​தில் விவ​சா​யிகள் கடன் கேட்​டால் 2 மாத வைப்​புத் தொகை​யாக ரூ.20 ஆயிரம் வாங்​கிக் கொண்டு கடன் வழங்​கு​வது சரியல்ல.

நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விவ​சா​யிகளிடம் லஞ்​சம் வாங்​காமல் நெல்லை கொள்​முதல் செய்ய வேண்​டும்.

40 கிலோ நெல்லை சாக்​குப்​பை​யில் அள்ளி தைத்​துக் கொடுக்க அரசு ரூ.10-க்கு பதில் ரூ.20 கொடுத்​தால், விவ​சா​யிகளிடம் லஞ்​சம் கேட்​பது தவிர்க்​கப்​படும். அங்கு விவ​சா​யிகளிடம் லஞ்​சம் கேட்​டால் மிகப்​பெரிய அளவில் போராட்​டம் நடத்​தப்​படும் என்று தெரி​வித்​துள்​ளார்.

கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம்: நதிகள் இணைப்பு சங்கம் குற்றச்சாட்டு
சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க 5.30 லட்சம் தடுப்பூசி மருந்தை தமிழகத்துக்கு அனுப்பியது மத்திய அரசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in