சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க 5.30 லட்சம் தடுப்பூசி மருந்தை தமிழகத்துக்கு அனுப்பியது மத்திய அரசு

சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க 5.30 லட்சம் தடுப்பூசி மருந்தை தமிழகத்துக்கு அனுப்பியது மத்திய அரசு
Updated on
1 min read

சென்னை: கர்ப்​பப்பை வாய் புற்​று​நோயை தடுக்க 14 வயதுடைய சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்​தும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது. இதற்​காக 5.30 லட்​சம் தடுப்பூசியை தமிழகத்​துக்கு மத்​திய அரசு அனுப்​பி​யுள்​ளது.

உலக அளவில் மார்​பகப் புற்​று​நோய்க்கு அடுத்​த​படி​யாக, கர்ப்​பப்பை வாய் புற்​று​ நோ​யால்​தான் பெண்​கள் அதி​கம் பாதிக்​கப்​படு​கின்​றனர். உலக அளவில் இந்த நோயால் பாதிக்​கப்​படும் பெண்​களில் 25 சதவீதம் பேர் இந்​தி​யர்​களாக உள்​ளனர்.

இந்​தி​யா​வில் ஆண்​டு​தோறும் சராசரி​யாக 80 ஆயிரம் பெண்​கள் கர்ப்​பப்பை வாய் புற்​று​நோ​யால் பாதிக்​கப்​படு​கின்​றனர். இலவசமாக செலுத்தப்படும் இதை கருத்​தில் கொண்​டு, பெண்​களுக்கு வளரிளம் பரு​வத்​திலேயே கர்ப்​பப்பை வாய் புற்​று​நோய் தடுப்​பூசி செலுத்​தும் திட்​டத்தை செயல்​படுத்த மத்​திய அரசு முடிவு செய்​தது.

அதன்​படி, நாடு முழு​வதும் 14 வயதுடைய சிறுமிகளுக்கு ‘ஹெச்​பி​வி’ தடுப்​பூசியை இலவச​மாக செலுத்​தும் திட்​டத்தை பிரதமர் மோடி கடந்த பிப்​.28-ம் தேதி தொடங்கி வைத்​தார்.

இந்த திட்​டம் மூலம் தமிழகத்​தில் 7 லட்​சம் சிறுமிகளுக்கு தடுப்​பூசி செலுத்​தப்​படு​கிறது.

அதற்​காக, இது​வரை 5.30 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட தடுப்​பூசியை தமிழகத்​துக்கு மத்​திய அரசு அனுப்பி வைத்​துள்​ளது. பள்​ளி​கள், அரசு மருத்​து​வ​மனை​களில் பொது சுகா​தா​ரத் துறை மூல​மாக சிறுமிகளுக்கு இலவச​மாக தடுப்​பூசி செலுத்​தப்​பட்டு வரு​கிறது.

சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க 5.30 லட்சம் தடுப்பூசி மருந்தை தமிழகத்துக்கு அனுப்பியது மத்திய அரசு
தமிழகத்தில் 44 தனித் தொகுதிகளில் கிறிஸ்தவராக மதம் மாறியவர்கள் போட்டியிட தடை விதிக்கக் கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in