

சென்னை: அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிக்க, 2027 ஜூலை 5-ம் தேதி வரை மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் திட்டமில்லா பகுதிகளில் 2011 ஜனவரி 1-ம் தேதிக்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதள வழியில் விண்ணப்பிக்க 2027 ஜூலை 5-ம் தேதி வரை மீண்டும் மறுவாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லை.
எனவே, விருப்பமுள்ளவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.