தொழுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் சென்னையில் அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை ஆய்வில் உறுதி

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: தொழுநோ​யால் பாதிக்​கப்​படும் குழந்​தைகளின் விகிதம் சென்னை​யில் அதி​கரித்​திருப்​பது பொது சுகா​தா​ரத்​துறை ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

தமிழக பொது சுகா​தா​ரத்​துறை சார்​பில் கடந்த 2021 முதல் 2025 வரையி​லானகால​கட்​டத்​தில் நகர்ப்​புற பகு​தி​களில் புதி​தாக கண்​டறியப்​பட்ட தொழுநோய் பாதிப்​பு​கள் குறித்த ஆய்​வை, துறை​யின் நிபுணர்​கள் தேவி கோவிந்​த​ராஜன், வசந்தி தங்​க​சாமி, தர்​மலிங்​கம் வேத​நாயகம் ஆகியோர் மேற்​கொண்​டனர்.

அந்த ஆய்வு முடிவு​களில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் சராசரி தொழுநோய் பாதிப்பு விகிதத்​தை​விட, சென்னை​யில் குழந்​தைகளுக்கு ஏற்​படும் பாதிப்பு விகிதம் அதி​க​மாக உள்​ளது. வயது, பாலினம், தொழுநோ​யின் வகை, குறை​பாடு ஆகிய​வற்றை அடிப்​படை​யாகக் கொண்டு ஆய்வு நடத்​தப்​ பட்​டது.

குறிப்​பாக, தொழிற்​சாலைகள் நிறைந்த பகு​தி​களி​லும், மாவட்ட எல்லை பகு​தி​களி​லும் சிறப்பு கவனம் செலுத்​தப்​பட்​டது. கடந்த 5 ஆண்டு காலத்​தில் மொத்​தம் 515 புதிய தொழுநோ​யாளி​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளனர். 2020-21-ல் லட்​சத்​தில் 1.0 ஆக இருந்த தொழுநோய் பாதிப்பு விகிதம், 2024-25-ல் 1.3 ஆக உயர்ந்​துள்​ளது.

அதி​கபட்​ச​மாக 2022-23-ல் அந்த விகிதம் 2.0-க்​கும் அதி​க​மாக இருந்​தது. 6 மண்​டலங்​களில் அதற்​கும் அதி​க​மாகவே பாதிப்பு இருந்​துள்​ளது. அதில், 3 மண்​டலங்​கள் தொழிற்​சாலைகள் நிறைந்தவை. மாவட்ட எல்​லைகள் ஆகும்.

குடும்​பத்​திலிருந்​தோ, பக்​கத்து வீட்​டினரிடம் இருந்தோ அந்த பாதிப்​பு​கள் பரவ​வில்லை என்​பது ஆய்​வில் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. அதே​நேரம், புலம்​பெயர்ந்​தவர்​கள் மூலம் இந்த தாக்​கம் ஏற்​பட்​டிருக்க வாய்ப்​புள்​ளது. தொழிற்​சாலைகள், மாவட்ட எல்லை பகு​தி​களில் தொழுநோய் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

அங்​குள்ள புலம்​பெயர்ந்த பணி​யாளர்​களிடையே பரிசோதனை மற்​றும் விழிப்​புணர்வு நடவடிக்​கைகள் மேற்​கொள்ள வேண்​டும். தேசிய சராசரியை​விட தமிழகத்​தில் பாதிப்​பு​களின் விகிதம் குறை​வாக உள்​ளது. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக பொது சுகா​தா​ரத்​துறை அதி​காரி​கள் கூறும்​போது, “மைக்கோ பாக்​டீரி​யம் லெப்ரே என்ற பாக்​டீரியா கிரு​மி​யால் தொழுநோய் ஏற்​படு​கிறது. பாதிக்​கப்​பட்ட நபரின் இரு​மல் மற்​றும் தும்​மலில் வெளி​யேறும் நீர் திவலைகளில் இருந்து பிறருக்கு அந்​நோய் பரவு​கிறது.

அக்​கிருமி ஒரு​வரது உடலில் பாதிப்பை ஏற்​படுத்த 5-ல் இருந்து 7 ஆண்​டு​கள் வரை ஆகலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறை​யும் போது, இந்​நோய் வெளிப்பட தொடங்​கும். ஆரம்ப கட்​டத்​திலேயே தொழுநோயை கண்​டறிந்து கூட்டு மருந்து சிகிச்சை அளித்​தால் 100 சதவீதம், நோய் பாதிப்பை குணப்​படுத்​தலாம்.

சரு​மத்​தில் உணர்​விழப்​பு, நிறமிழப்​பு, காது மடலில் வீக்​கம் அல்​லது கட்​டி, கை, கால்​கள் தளர்ந்து போகும் நிலை, விரல்​கள் வளைந்து போதல், கைகளில் பொருள்​களை உறு​தி​யாக பிடிக்க முடி​யாத நிலை, கை மற்​றும் கால்​களில் அரிப்​பு, ஆறாத புண்​கள் இருந்​தால், அதனை அலட்​சி​யப்​படுத்​தக்​கூ​டாது” என்​றனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு: முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in