டெல்டா, தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை: வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்

டெல்டா, தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை: வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்
Updated on
1 min read

திருச்சி: இலங்​கையை ஒட்டி ஏற்​பட்​டுள்ள காற்​றழுத்த தாழ்​வுநிலை​யால் டெல்டா மற்​றும் தென் மாவட்​டங்​களில் இன்​றும், நாளை​யும் (நவ.23, 24) கனமழை பெய்​யும் என்று தனியார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறி​யிருப்​ப​தாவது: குமரிக்​கடல் கடந்து அரபிக்​கடல் சென்ற காற்​றழுத்த தாழ்வு நிலை லட்​சத்​தீவு அருகே நீடித்​துக் கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில், இலங்​கையை ஒட்​டி​யுள்ள தென்​மேற்கு வங்​கக் கடலில் புதிய கீழடுக்கு சுழற்சி கடந்த 9-ம் தேதி உரு​வானது. இது மேலும் தீவிரமடைந்து இலங்​கை​யின் தெற்​குப் பகு​தி​யையொட்டி தாழ்வு நிலை​யாக உரு​வெடுத்​தது. தற்​போது, இலங்​கைக்கு தென் மேற்கே குமரிக் கடலை​யொட்​டிய பகு​தி​யில் நிலை​கொண்​டுள்​ளது.

இது மேலும் தீவிரமடைந்து இன்​றும், நாளை​யும் தமிழகத்​தின் பெரும்​பாலான மாவட்​டங்​களுக்​கும் பரவலான மழைப்​பொழிவை கொடுக்​கும். டெல்டா மற்​றும் தென் மாவட்​டங்​களில் கனமழை பெய்​யும். குறிப்​பாக, தென் மாவட்​டங்​களின் கடலோரம் மற்​றும் மேற்​குத் தொடர்ச்சி மலைப் பகு​தி​களில் மிக கனமழைக்கு வாய்ப்​புள்​ளது. மாஞ்​சோலை உள்​ளிட்ட மலைப் பள்​ளத்​தாக்கு பகு​தி​களில் அதி கனமழைக்​கும் வாய்ப்​புள்​ளது.

இது​வரை மழை பற்​றாக்​குறை​யாக உள்ள திண்​டுக்​கல், திருப்​பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்​ளிட்ட மாவட்​டங்​களில் அதிக மழை பெய்​யும். சென்னை உள்​ளிட்ட வடகடலோர மாவட்​டங்​களில் இன்​றும், நாளை​யும் அவ்​வப்​போது மழை பெய்​யக்​கூடும்.

சுமத்ரா தீவு அருகே நீடித்​து​ கொண்​டுள்ள காற்று சுழற்சி தாழ்​வுப் பகு​தி​யாக தீவிர​மாகும் என்று எதிர்​பார்த்த நிலை​யில், இன்​னும் காற்று சுழற்​சி​யாகவே நீடிக்​கிறது. இதுதாழ்​வுப் பகு​தி​யாக உரு​வாகி தீவிரமடைய சில நாட்​கள் தாமத​மாகும் என்று தெரி​கிறது.

வரும் நாட்​களில் தெற்கு அந்​த​மான் பகு​தி​யில் காற்​றழுத்த தாழ்வு நிலை தீவிரமடை​யும் என்று எதிர்​பார்க்​கும் நிலை​யில், அதற்கு மாறாக இலங்கைகுமரிக்​கடலுக்கு இடைப்​பட்ட பகு​தி​யில் நிலை​கொண்​டுள்ள தாழ்வு நிலை தீவிரமடைந்​து, மன்​னார் வளை​கு​டா, இலங்கை மற்​றும் தமிழக கடலோரப் பகு​தி​களை​யொட்டி வடக்கு நோக்கி நகர்ந்து வரும் 29-ம் தேதி வரை அதிக மழையைத் தரும்.

அதே நேரத்​தில், இது தீவிரத்​தாழ்​வுப் பகுதி அல்​லது தாழ்வு மண்​டலம் வரை மட்​டுமே தீவிரமடை​யும் என்​ப​தால், புயல் பாதிப்பு இருக்​காது.

இது​போல டிசம்​பர், ஜனவரி மாதங்​களி​லும் புயல் பாதிப்பு இல்​லாமல், அனைத்து மாவட்​டங்​களிலும் அதிக மழைப்​பொழிவு இருக்​கும். மழையை எதிர்​நோக்​கி​யுள்ள விவ​சா​யிகள் நம்​பிக்​கை​யுடன் இருக்​கலாம்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

டெல்டா, தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை: வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்
கோவை, ஈரோடு மாவட்டங்களில் நவ. 25, 26-ம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப் பயணம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in