சென்னை | இளம் பெண்களிடம் தவறாக நடந்த 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்

சென்னை | இளம் பெண்களிடம் தவறாக நடந்த 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்
Updated on
1 min read

சென்னை: ​சாலை​யில் நடந்து சென்ற இளம் பெண்​களிடம் தவறாக நடந்த நேபாளத்​தைச் சேர்ந்த 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

புரசை​வாக்​கத்​தைச் சேர்ந்த இளம் பெண் ஒரு​வருக்கு நேற்று முன்​தினம் நள்​ளிரவு திடீர் உடல்​நலக் குறைவு ஏற்​பட்​டது. இதையடுத்து அப்​பெண், உறவுக்​கார பெண்ணை அழைத்​துக் கொண்டு புரசை​வாக்​கம் நெடுஞ்​சாலை​யில் உள்ள ஒரு மருந்​தகத்​துக்கு நடந்து சென்று கொண்​டிருந்​தார்.

அப்​போது அந்த வழி​யாக மது போதை​யில் வந்த இளைஞர்​கள் 3 பேர் இளம் பெண்​களிடம் பேச்சு கொடுத்து கிண்​டலடித்​துள்​ளனர். மேலும் அப்​பெண்​களிடம் ஆபாச​மாக சைகை காட்​டி​விட்டு அங்​கிருந்து சென்​றுள்​ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்​கள் உடனடி​யாக அரு​கில் நின்​றிருந்த ஆட்டோ ஓட்​டுநரிடம் இது தொடர்​பாக தெரி​வித்​தனர். அந்த ஆட்டோ ஓட்​டுநர் பெண்​கள் இரு​வரை​யும் ஆட்​டோ​வில் ஏற்​றிக்​கொண்டு அந்த 3 பேரை​யும் பிடிக்​கச் சென்​றார்.

சிறிது தூரத்​தில் இளம் பெண்​கள் 3 பேரை​யும் அடை​யாளம் காட்​ட​வே, ஆட்டோ ஓட்​டுநர் அவர்​களை மடக்​கி​னார். நடந்​ததை அறிந்த அந்த பகு​தி​யில் நின்​றவர்​கள், பெண்​களிடம் தவறாக நடந்த அந்த 3 பேருக்​கும் தர்ம அடி கொடுத்து கீழ்ப்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தனர்.

போலீ​ஸாரின் விசா​ரணை​யில், பிடிபட்​ட​வர்​கள் நேபாளத்​தைச் சேர்ந்த ஜன்​சல் (22) மற்​றும் அதே நாட்​டைச் சேர்ந்த 2 சிறு​வர்​கள் என்​பது தெரிய​வந்​தது.

அவர்​கள் அதே பகு​தி​யில் உள்ள ஓட்​டலில் பணி​யாற்றி வரு​வதும், பணி முடிந்​ததும் மது அருந்​தி​விட்​டு, சாலை​யில் நடந்து சென்ற இளம் பெண்​களிடம் தவறாக நடந்து கொண்​டதும் தெரிய​வந்​தது. இதையடுத்து 3 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

சென்னை | இளம் பெண்களிடம் தவறாக நடந்த 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்
சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ராஜினாமா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in