ஆயுள் தண்டனை கைதி ஞானசேகரனுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு

ஆயுள் தண்டனை கைதி ஞானசேகரனுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு
Updated on
1 min read

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் துன்​புறுத்​தல் வழக்​கில் ஆயுள் தண்​டனை கைதி​யான ஞான​சேகரன் உடல்​நலக் குறைவு காரண​மாக ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் மீண்​டும் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.

சென்னை அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் துன்​புறுத்​தல் வழக்​கில் கோட்​டூர்​புரத்​தைச் சேர்ந்த பிரி​யாணி கடை உரிமை​யாளர் ஞான​சேகரனை (38) கோட்​டூர்​புரம் அனைத்து மகளிர் போலீ​ஸார் 2024 டிசம்​பரில் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

இந்த வழக்​கில் ஞான​சேகரனுக்கு ஆயுள் தண்​டனை (30 ஆண்டு சிறை) விதித்து சென்னை மகளிர் நீதி​மன்​றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி தீர்ப்​பளித்​தது. இதையடுத்து அவர் புழல் சிறை​யில் தண்​டனை கைதி​கள் பிரி​வில் அடைக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில் அவருக்கு நேற்று அதி​காலை 1.30 மணி​யள​வில் திடீரென உடல் நலக்​குறைவு (வலிப்​பு) ஏற்​பட்​டதை அடுத்​து, சிறைக் காவலர்​கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்த்​தனர். தற்​போது ஞான​சேகரன் அவசர சிகிச்​சைப் பிரிவு வார்​டில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வரு​கிறார்.

ஏற்​கெனவே 4 முறை ஞான​சேகரனுக்கு இது​போன்று வலிப்பு ஏற்​பட்டு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்​றுள்ள நிலை​யில், தற்​போது 5-வது முறை​யாக வலிப்பு நோய் காரண​மாக மீண்​டும் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ஆயுள் தண்டனை கைதி ஞானசேகரனுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவு செய்ய கட்டணமில்லா பயணம்: மாநகர் போக்குவரத்துக் கழகம் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in