நீதிபதி நிஷாபானு கேரள உயர் நீதிமன்றத்தில் டிச.20-க்குள் பணியில் சேர குடியரசுத் தலைவர் கெடு விதிப்பு

நீதிபதி நிஷாபானு கேரள உயர் நீதிமன்றத்தில் டிச.20-க்குள் பணியில் சேர குடியரசுத் தலைவர் கெடு விதிப்பு
Updated on
1 min read

சென்னை: ‘நீண்ட விடுப்​பில் உள்ள நீதிபதி ஜெ.நிஷா​பானு, டிச.20-ம் தேதிக்​குள் கேரள உயர் நீதி​மன்​றத்​தில் பணி​யில் சேர வேண்​டும்’ என்று குடியரசுத் தலை​வர் கெடு விதித்து உத்​தர​விட்​டுள்​ளார்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மூன்​றாவது இடத்​தில் பதவி வகித்து வந்த மூத்த நீதிபதி ஜெ.நிஷா​பானுவை, கேரள உயர் நீதி​மன்​றத்​துக்கு இடமாறு​தல்செய்ய உச்ச நீதி​மன்ற கொலீஜி​யம் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்​திய அரசுக்​கும், குடியரசுத் தலைவருக்​கும் பரிந்​துரை செய்​தது.

அதையேற்ற குடியரசுத் தலைவர் திர​வுபதி முர்​மு, சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி ஜெ.நிஷாபானுவை, கேரள உயர் நீதி​மன்​றத்​துக்கு இடமாறுதல் செய்து

கடந்த அக்​.13-ல் உத்​தர​விட்​டார். ஆனால் நீதிபதி ஜெ.நிஷா​பானு, கேரள உயர் நீதி​மன்​றத்​துக்கு சென்று பதவி​யேற்​காமல் அக்​.14 முதல் தனது உடல்​நிலை​யைக் காரணம் காட்டி நீண்ட விடுப்​பில் உள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. இவ்​வாறு காலம் தாழ்த்தி வரு​வது உச்ச நீதி​மன்ற கொலீஜி​யம், நீதித்​துறை கட்​டமைப்பு மற்​றும் மாண்பை அவம​திக்​கும் செயல் எனக் கூறி, சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சிலர் கூட்​டாக இது தொடர்​பாக குடியரசுத் தலை​வருக்​கு கடிதம் அனுப்​பினர்.

அதே​போல, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மூன்​றாவது இடத்​தில் உள்ள நீதிபதி நிஷா​பானுவை வேண்​டுமென்றே கேரள உயர் நீதி​மன்​றத்​துக்கு இடமாறு​தல் செய்து அவரை 9-வது இடத்​துக்கு தள்​ளி​யுள்​ள​தாக உயர் நீதி​மன்ற மதுரை கிளை வழக்​கறிஞர்​கள் சங்​க​மும் குற்​றம்​சாட்​டியது. இதற்​கிடையே நீதிபதி நிஷா​பானு இடம்​பெறாத சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி மற்​றும் மூத்த நீதிப​தி​கள் இரு​வர் அடங்​கிய கொலீஜி​யம், உயர் நீதி​மன்​றத்​தில் காலி​யாக உள்ள நீதிப​தி​கள் பணி​யிடங்​களை நிரப்பும் வகை​யில் மாநில அரசுக்கு பரிந்​துரைகள் அனுப்பப்பட்டதாகவும், அப்போது நீதிபதி நிஷா​பானு விவகாரத்​தைச் சுட்​டிக்காட்டி தமிழக அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்​பிய​தாகவும்​ தகவல்​கள் வெளியாகின.

இந்​நிலை​யில் இந்த விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யுடன் ஆலோ​சனை நடத்​தி​யபிறகு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பிறப்​பித்​துள்ள உத்​தர​வில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் இருந்து கேரள உயர் நீதி​மன்​றத்​துக்கு இடமாற்​றம் செய்​யப்​பட்ட நீதிபதி ஜெ.நிஷா​பானு, டிச.20-ம் தேதிக்​குள் கேரள உயர் நீதி​மன்​றத்​துக்கு சென்று பதவி​யேற்க வேண்​டும். இவ்வாறு அந்த உத்​தர​வில் குறிப்பிட்​டுள்​ளார்.

அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின்​படி ஒரு உயர் நீதி​மன்ற நீதிபதி பணி​யிட​மாற்​றம் செய்​யப்​பட்​டாலே அவரது பழைய பணி​யிடம் காலி ஆகி​விட்​ட​தாக கருதப்​படும் என மத்​திய சட்​டத்​துறை அமைச்​சர் அர்​ஜுன்​ராம் மேக்​வாலும் நாடாளு​மன்​றத்​தில் விளக்கமளித்​துள்​ளார். இதனால் நீதிபதி நிஷா​பானு டிச.20-க்​குள் கேரள உயர் நீதி​மன்​றத்​தில்​ நீதிப​தி​யாக பதவி​யேற்​க வேண்​டிய கட்​டா​யம்​ ஏற்​பட்​டுள்​ளது.

நீதிபதி நிஷாபானு கேரள உயர் நீதிமன்றத்தில் டிச.20-க்குள் பணியில் சேர குடியரசுத் தலைவர் கெடு விதிப்பு
தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in