“ராஜகண்ணப்பன் எப்படிப்பட்டவர் என்பது மக்களுக்கு தெரியும்” - பிரேமலதா பதிலடி

தேமுதிகவின் 26 ஆம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவும் நிர்வாகிகளும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

தேமுதிகவின் 26 ஆம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவும் நிர்வாகிகளும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

Updated on
1 min read

“அமைச்​சர் ராஜகண்​ணப்​பன் எப்​படிப்​பட்​ட​வர் என தமிழக மக்​களுக்கு தெரி​யும்” என, தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் பதிலடி கொடுத்​துள்​ளார்.

மதுரை​யில் நேற்று முன்​தினம் பொதுக்​கூட்​டம் மற்​றும் பத்​திரி​கை​யாளர் சந்​திப்​பில் பேசிய அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன், “விஜய​காந்த் இருந்​த​போது தேமு​திக எதிர்க்​கட்​சி​யாக இருந்​தது. இல்லை என்று நாம் சொல்ல முடி​யாது. தேமு​திக இரு கட்​சிகளிட​மும் கூட்​டணி பேசக்​கூ​டாது. இங்​கே​யும் பேசுவது, அங்​கே​யும் பேசுவது என்​பது சரி​யாக வரா​து. விசு​வாச​மாக இருந்​தால் ஒரு பக்​கம்​தான் இருக்க வேண்​டும். தேமு​திக எல்​லாம் ஒரு கட்​சி​யா, பெரிய கட்​சிகளை பற்றி கேளுங்​கள்” என தெரி​வித்​திருந்​தார்.

இந்​நிலை​யில், நேற்று சென்​னை​யில் ராஜகண்​ணப்​பன் கூறியது தொடர்​பாக செய்​தி​யாளர்​கள் கேட்ட கேள்விக்​குப் பதில் சொன்ன பிரேமலதா கூறிய​தாவது: நயி​னார் நாகேந்​திரன் சொன்​னதைக் கேட்​டீர்​களா. பழனி​சாமி சொன்​னதைக் கேட்​டீர்​களா. அமைச்​சர் எ.வ.வேலு சொன்​னதை​யும் நீங்​கள் தான் செய்​தி​யாகப் போட்​டீர்​கள். அவர்​கள் மூன்று பேரும் தலை​மை​யில் இருப்​பவர்​கள்.

அவர்​களே, “நாங்​கள் கூட்​டணி பற்றி எது​வுமே பேச​வில்​லை” என்று சொல்​லும்​போது, உங்​களிடம் இரண்டு பக்​க​மும் பேசுகி​றார்​கள் என்ற தவறான செய்​தியை யார் சொல்​கி​றார்​கள் என்று எனக்​குத் தெரிய​வில்​லை. இதற்கு நான் பதில் சொல்​வதை விட, அதற்கு உரிய​வர்​களே பதில் கொடுத்து விட்​டார்​கள். இதனால் அந்​தக் கேள்​வியை திரும்​பத் திரும்ப எங்​களிடம் கேட்​காதீர்​கள். எங்​கள் மாவட்​டச் செய​லா​ளர்​கள், தொண்​டர்​கள் எதை விரும்​பு​கி​றார்​களோ, அந்த கூட்​ட​ணி​யில் தான் தேமு​திக இணை​யும்.

எனவே, எப்​போது கூட்​ட​ணியை அறி​விப்​பீர்​கள் என்ற கேள்​வியை கேட்க வேண்​டிய​வர்​கள் எங்​கள் கட்​சி​யின் நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தான். அவர்​களே கூலாக இருக்​கி​றார்​கள்; ஹேப்​பி​யாக, நம்​பிக்​கை​யுடன் இருக்​கி​றார்​கள். தேமு​திக எங்​களு​டைய கட்​சி. என்ன முடிவு எடுப்​பது, எப்​போது கூட்​ட​ணியை அறி​விப்​பது என்​ப​தைப் பற்​றியெல்​லாம் உரிய நேரத்​தில் நாங்​கள் அறி​விப்​போம்.

அதனால் நீங்​களும் கூலாக இருங்​கள்; டென்​ஷன் வேண்​டாம். தேமு​திக எப்​படிப்​பட்ட கட்சி என்​பதை தமிழக மக்​கள் அறி​வார்​கள். நாங்​கள் இரண்டு பக்​க​மும் பேசுகி​றோம் என்ற கருத்​தைச் சொன்​ன​வர் (ராஜகண்​ணப்​பன்) எப்​படிப்​பட்​ட​வர் என்​பது மக்​களுக்​குத் தெரி​யும். இவ்​​வாறு அவர் தெரி​வித்​​தார்​.

<div class="paragraphs"><p>தேமுதிகவின் 26 ஆம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவும் நிர்வாகிகளும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.</p></div>
டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மூலம் தேர்வான 9,801 பேருக்கு நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிறார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in