6 மாவட்டங்களில் பிப்.5 வரை பனிமூட்டம் நிலவ வாய்ப்பு

6 மாவட்டங்களில் பிப்.5 வரை பனிமூட்டம் நிலவ வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் 6 மாவட்​டங்​களில் பிப்​.6-ம் தேதி வரை பனிமூட்​டம் நிலவ வாய்ப்​புள்​ளது. இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு:

தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் இன்று (பிப்​.3) வறண்ட வானிலை நில​வக்​கூடும். தெற்கு கேரள கடலோரப் பகு​தி​களுக்கு அப்​பால் உள்ள தென்​கிழக்கு அரபிக்​கடல் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக 4-ம் தேதி தென் தமிழகம் மற்​றும் டெல்டா மாவட்​டங்​களி​லும், 5-ம் தேதி தென் தமிழகம், வட தமிழக கடலோர மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் லேசான மழை பெய்​யக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். அதி​கபட்ச வெப்​பநிலை 31 டிகிரி செல்​சி​யஸ், குறைந்​த​பட்ச வெப்​பநிலை 24 டிகிரி செல்​சி​யஸை ஒட்டி இருக்​கக்​கூடும்.

தென் தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் குமரிக்​கடல் பகு​தி​களில் பிப்​.6-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 55 கி.மீ. வேகத்​தில் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.

தமிழகத்​தில் கடந்த 24 மணி நேரத்​தில் அதி​கபட்​ச​மாக திருநெல்​வேலி மாவட்​டம் ஊத்​து, நாலு​முக்​கில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

6 மாவட்டங்களில் பிப்.5 வரை பனிமூட்டம் நிலவ வாய்ப்பு
3 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வுக்கான தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி: தமிழக அரசுக்கு ஆளுநர் வேண்டுகோள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in