விஜய் மீது சிபிஐ வழக்கு தொடர வாய்ப்பு: அதிமுக எம்.பி கருத்தால் பரபரப்பு

விஜய் மீது சிபிஐ வழக்கு தொடர வாய்ப்பு: அதிமுக எம்.பி கருத்தால் பரபரப்பு
Updated on
1 min read

சென்னை: ‘முதல்​வர் விஜய் மீது சிபிஐ வழக்கு தொடர வாய்ப்​புள்​ளது’ என, அதி​முக எம்​.பி இன்​பதுரை தெரி​வித்த கருத்​தால் அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பு ஏற்​பட்​டு உள்​ளது.

தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் தவெக 108 இடங்​களில் வெற்​றி​பெற்​றது. ஆனால் பெரும்​பான்​மைக்கு தேவை​யான 118 இடங்​கள் கிடைக்​க​வில்​லை. இதையடுத்து காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட், விசிக உள்​ளிட்ட கட்​சிகளு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டு, அவர்​களின் ஆதரவை அக்​கட்சி பெற்​றது.

இதற்​கிடையே, அதி​முக​வில் சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் தனி அணி உரு​வாகி, 25 பேர் அரசுக்கு ஆதர​வாக சட்​டப்​பேர​வை​யில் வாக்​களித்​துள்​ளனர். இதனால் அதி​முக​வுக்​குள் பெரும் பிரச்​சினை வெடித்​துள்​ளது. மேலும் சி.​வி.சண்​முகம் தரப்​பு, அரசுக்கு ஆதரவு தெரி​வித்​த​தில் குதிரை பேரம் நடந்​துள்​ள​தாக எதிர்க்​கட்​சிகள் குற்​றம்​சாட்டி வரு​கின்​றன.

இப்​படி​யான சூழலில், அதி​முக எம்​.பி இன்​பதுரை தனது எக்ஸ் தள பக்​கத்​தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நா​டாளு​மன்​றத்​தில் 1993-ல் நடை​பெற்ற நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் வெற்​றி​பெற குதிரை பேரம் மூலம் ஜெஎம்​எம் கட்​சி​யின் எம்​.பி.க்​கள் ஆதரவை குறுக்கு வழி​யில் பெற்ற அன்​றைய பிரதமர் நரசிம்​ம​ராவ், பூட்​டாசிங் ஆகியோர் மீது சிபிஐ வழக்​குப்​ப​திவு செய்​தது போன்​று, தற்​போது முதல்​வர் விஜய் மீதும் வழக்கு வர வாய்ப்பு உள்​ளது. இவ்வாறு அந்த பதிவில் இன்பதுரை தெரிவித்துள்ளார். அவரது கருத்து தமிழக அரசி​யல் வட்​டாரத்​தில் பெரும் பரபரப்​பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் மீது சிபிஐ வழக்கு தொடர வாய்ப்பு: அதிமுக எம்.பி கருத்தால் பரபரப்பு
வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in