நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: சொந்த ஊருக்கு 16 லட்சம் பேர் பயணம்

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: சொந்த ஊருக்கு 16 லட்சம் பேர் பயணம்

சென்னை பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
Published on

சென்னை: பொங்​கல் பண்​டிகை நாளை கொண்​டாடப்பட உள்ள நிலை​யில் சொந்த ஊர்​களுக்கு 16 லட்​சம் பேர் சென்​றுள்​ளனர். இதனால் சென்னை பேருந்​து, ரயில் நிலை​யங்​களில் மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

தமிழகத்​தில் பொங்​கல் பண்​டிகை நாளை கொண்​டாடப்​படு​கிறது. சென்​னை​யில் வேலை, கல்​வி, வியா​பாரம் போன்ற காரணங்களுக்​காக பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்​தவர்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் வசிக்கின்​றனர். இவர்​கள் பொங்​கல், தீபாவளி மற்​றும் கோயில் திரு​விழாக்​கள் உள்​ளிட்ட சிறப்பு நாட்​களில் குடும்​பத்​துடன் தங்​கள் சொந்த ஊருக்​குச் செல்​வது வழக்​கம்.

நாளை பொங்​கல் பண்டிகை என்​ப​தால் ஒரு நாள் முன்​பாக இன்றே தங்​கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தூத்​துக்​குடி, கன்​னி​யாகுமரி, நெல்​லை, மதுரை உள்​ளிட்ட தென் மாவட்​டங்​களைச் சேர்ந்​தவர்​களும், கோவை, சேலம் உள்​ளிட்ட மேற்கு மாவட்​டங்​களைச் சேர்ந்​தவர்​களும் திட்​ட​மிட்​டிருந்​தனர். இதனால் நேற்று காலை முதலே சென்னை சென்ட்ரல், எழும்​பூர், தாம்​பரம் ரயில் நிலை​யங்​களி​லும், கோயம்​பேடு, கிளாம்​பாக்​கம், மாதவரம் என பேருந்து நிலை​யங்​களி​லும் மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. திரு​வண்​ணா​மலை, விழுப்​புரம் உள்​ளிட்ட வட மாவட்​டங்​களை சேர்ந்​தவர்கள் இன்று பயணம் செய்ய திட்​ட​மிட்​டுள்​ளனர்.

பண்டிகை காலங்களில் தமிழக அரசு சார்​பில் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. அந்த வகை​யில் ஜன.9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. சென்​னை​யில் இருந்து வழக்​க​மாக தின​மும் 2,092 பேருந்​துகள் இயக்​கப்​படும் நிலை​யில், கடந்த 9-ம் தேதி கூடு​தலாக 614 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்​டன.

சென்​னை​யில் இருந்து கடந்த 9-ம் தேதி இயக்​கப்​பட்ட 2,706 பேருந்​துகளில் மொத்​தம் 1.21 லட்​சம் பயணி​கள், 10-ம் தேதி இயக்​கப்​பட்ட 2,804 பேருந்​துகளில் 1.26 லட்​சம் பயணி​கள், 11-ம் தேதி இயக்​கப்​பட்ட 2,760 பேருந்​துகளில் 1.13 லட்​சம் பயணி​கள், 12-ம் தேதி இயக்​கப்​பட்ட 3,102 பேருந்​துகளில் 1.30 லட்​சம் பயணி​கள் என 4 நாட்​களில் 11,372 பேருந்​துகளில் 4.88 லட்​சம் பேர் பயணித்​துள்​ளனர்.

சென்​னை​யில் இருந்து நேற்று மட்​டும் பல்​வேறு ஊர்​களுக்கு மொத்​தம் 4,800-க்​கும் மேற்​பட்ட பேருந்​துகள் இயக்​கப்​பட்​டு, 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயணம் மேற்​கொண்​ட​தாக போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர். அதன்​படி கடந்த 5 நாட்​களில் அரசு பேருந்​துகளில் மட்​டும் 7 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் சொந்த ஊர்​களுக்கு சென்றுள்​ளனர்.

இதே​போல ரயில்​களி​லும் கடந்த வெள்​ளிக்​கிழமை முதல் பொது​மக்​கள் தங்​கள் சொந்த ஊர்​களுக்​குச் செல்ல தொடங்​கினர். குறிப்​பாக திங்​கள், செவ்​வாய்க்​கிழமை​களில் அதிக எண்​ணிக்​கை​யில் பயணி​கள் சென்​றனர். வழக்​க​மான விரைவு ரயில்​களில் டிக்​கெட் முன்​ப​திவு செய்ய முடி​யாதவர்​கள், சிறப்பு ரயில்​களில் முன்​ப​திவு செய்​து, சொந்த ஊருக்கு புறப்​பட்​டனர். முன்​ப​திவு டிக்​கெட் கிடைக்​காதவர்​கள் விரைவு ரயில்களில் பொதுப் பெட்​டிகளில் நெரிசலுடன் பயணம் மேற்​கொண்​டனர்.

அந்த வகை​யில், சென்​னை​யில் இருந்து பிற மாவட்​டங்​களுக்கு புறப்​பட்ட ரயில்​களும் நிரம்பி வழிந்​தன. நேற்று மட்​டும் ஒன்​றரை லட்​சம் பேர் பயணம் செய்​தனர். ஒட்​டுமொத்​த​மாக கடந்த 5 நாட்​களில் 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் ரயில்​களில் பயணம் செய்​துள்​ளனர்.

ஆம்னி பேருந்​துகளில் 3 லட்​சம் பேரும், கார்​கள், இருசக்கர வாக​னங்​களில் ஆயிரக்​கணக்​கானோரும் சொந்த ஊர்​களுக்​குப் புறப்​பட்​டுச் சென்​றனர்.

பொங்​கலைக் கொண்​டாட கடந்த 5 நாட்​களில் அனைத்து வித​மான போக்​கு​வரத்து சேவை​கள் வாயி​லாக 16 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தங்​கள் சொந்த ஊர்​களுக்​குச் சென்​றுள்​ளனர்.

இவர்​கள் வரும் ஞா​யிற்​றுக்​கிழமை புறப்​பட்டு திங்​கட்​கிழமை காலை மீண்​டும் சென்னை திரும்​பும் வகை​யில் பேருந்​து, ரயில்​களில்​ டிக்​கெட்​ முன்​ப​திவு செய்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: சொந்த ஊருக்கு 16 லட்சம் பேர் பயணம்
இயர்போன் வடிவில் ஸ்மார்ட் சாதனத்தை வடிவமைக்கும் ‘ஓபன் ஏஐ’ - ஆப்பிள் ஏர்பாட்ஸுக்கு போட்டி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in