திருச்செந்தூருக்கு படையெடுக்கும் அரசியல் கட்சியினர்: 20-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் கோயிலில் நேற்று தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அதிமுக பொதுச்செயலாளர்  பழனிசாமியின் மனைவி ராதா.

திருச்செந்தூர் கோயிலில் நேற்று தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் மனைவி ராதா.

Updated on
2 min read

தூத்துக்குடி: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் முடிவு​கள் மே 4-ம் தேதி வெளி​யாக​வுள்ள நிலை​யில், திருச்​செந்​தூர் கோயிலுக்கு அரசியல் கட்​சி​யினர், வேட்​பாளர்​கள் படையெடுத்து வரு​கின்​றனர்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யின் மனைவி ராதா நேற்று திருச்​செந்​தூரில் சுவாமி தரிசனம் செய்​தார். சட்​டப்​பேரவை தேர்​தல் கடந்த 23-ம் தேதி நடை​பெற்​றது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடை​பெறவுள்ள நிலை​யில், தேர்​தலுக்கு பிந்​தைய கருத்து கணிப்புகள் நேற்று முன்​தினம் மாலை வெளி​யாகின.

தெளிவற்ற கருத்து கணிப்புகள்

இதில் திமுக தலை​மையி​லான கூட்​டணி அதிக இடங்​களில் வெற்றி பெறும் என பெரும்​பாலான கருத்​துக் கணிப்​பு​கள் தெரி​வித்​தா​லும், அதி​முக கூட்​டணி அதிக இடங்​களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்​ப​தாக சில கருத்​துக் கணிப்​பு​களும், தவெக அதி​க​மாக வெல்ல வாய்ப்பு இருப்​ப​தாக ஒன்​றிரண்டு கருத்​துக் கணிப்​பு​களும் தெரி​வித்​துள்​ளன. இதனால் தெளிவற்ற நிலை காணப்​படு​கிறது.

இந்​நிலை​யில், அரசி​யல் கட்​சி​யினர், வேட்​பாளர்​கள் வழி​பாட்டு தலங்​களை நோக்கி படையெடுக்கத் தொடங்​கி​யுள்​ளனர். குறிப்​பாக, திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயிலை நோக்கி அதி​க​மானோர் வந்த வண்​ணம் உள்​ளனர்.

முரு​கப்பெரு​மானின் அறு​படை வீடு​களில் 2-ம் படை வீடான திருச்​செந்​தூரில், சூரபத்​மனை, சுவாமி ஜெயந்​தி​நாதர் வெற்​றி கொண்​டார். இதனால் இந்த கோயி​லில் வழிபட்​டால் எதிரி​கள் மற்​றும் எதிர் வினை​களை வென்​று​விடலாம் என்​பது பக்​தர்​களின் நம்​பிக்​கை.

இதன்​படி அரசி​யல் கட்​சி​யினரும், வேட்​பாளர்​களும் திருச்​செந்​தூர் கோயிலுக்கு வந்த வண்​ணம் உள்​ளனர். தவெக தலை​வர் விஜய், கடந்த 28-ம் தேதி திருச்​செந்​தூர் கோயி​லில் வேலுடன் விஸ்​வரூப தரிசனத்​தில் பங்​கேற்று வழி​பாடு நடத்​தி​னார்.

அதே​நாளில் அதி​முக​வின் முன்​னாள் அமைச்​சர்​களும், தற்​போதைய வேட்​பாளர்​களு​மான ஆர்​.பி.உதயகு​மார், கே.டி.​ராஜேந்​திர பாலாஜி, எம்​.சி.சம்​பத் ஆகியோர் திருச்​செந்​தூர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​தனர்.

நேற்று முன்​தினம் திமுக அமைச்​சர்​களும், தற்​போதையை வேட்​பாளர்​களு​மான பி.கே.சேகர்​பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்​டப்​பி​டாரம் தொகுதி திமுக வேட்​பாளர் ராமஜெ​யம் ஆகியோர் தரிசனம் செய்​தனர்.

இது​போல திமுக அமைச்​சர் அன்​பில் மகேஷ் மற்​றும் திமுக, அதி​முக உள்​ளிட்ட கட்​சிகளைச் சேர்ந்த வேட்​பாளர்​கள், முக்​கிய நிர்​வாகி​கள் சிலர் அடுத்​தடுத்து இங்கு தரிசனம் செய்​தனர்.

இந்​நிலை​யில், அதி​முக பொதுச்​செய​லா​ள​ரும், முன்​னாள் முதல்​வரு​மான பழனி​சாமி​யின் மனைவி ராதா நேற்று திருச்​செந்​தூர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​தார்.

நேற்று அதி​காலை 4.30 மணி​யள​வில் கோயிலுக்கு வந்த அவர், விஸ்​வரூப தரிசனத்​தில் பங்​கேற்று மூல​வர்சுப்​பிரமணிய சுவாமியை வழிபட்​டார். முன்​ன​தாக கோயில் நிர்​வாகம் சார்​பில் அவருக்கு வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

சட்​டப்​பேரவை தேர்​தல் வாக்​குப்​ப​திவு முடிந்த பிறகு இது​வரை 20-க்​கும் மேற்​பட்ட வேட்​பாளர்​கள், கட்சி தலை​வர்​கள் திருச்​செந்​தூர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​துள்​ளனர்.

வாக்கு எண்​ணிக்​கைக்கு இன்​னும் 3 நாட்​கள் உள்ள நிலை​யில் மேலும் பல தலை​வர்​கள், வேட்​பாளர்​கள் திருச்​செந்​தூர் கோயிலுக்கு வர வாய்ப்பு இருப்​ப​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

<div class="paragraphs"><p>திருச்செந்தூர் கோயிலில் நேற்று தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அதிமுக பொதுச்செயலாளர்  பழனிசாமியின் மனைவி ராதா.</p></div>
சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் திமுக நிர்வாகிகள் சந்திப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in