செவிலியர் தினத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் கோலமிட்டு கொண்டாடிய செவிலியர்கள். | படம்; ம.பிரபு |

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் கோலமிட்டு கொண்டாடிய செவிலியர்கள். | படம்; ம.பிரபு |

Updated on
1 min read

சென்னை: உலக செவிலியர் தினத்தை ஒட்டி அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்​துகளை தெரி​வித்​துள்​ளனர். ஆண்​டு​தோறும் உலக செவிலியர் தினம் மே மாதம் 12-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது.

நவீன செவிலியர் பயிற்சி முறையை நிறு​விய பிளாரன்ஸ் நைட்​டிங்​கேல் அம்​மை​யார் பிறந்​த​நாளை நினை​வு​கூரும் வகை​யில் இந்த கொண்​டாட்​டம் நடைபெறுகிறது.

சென்னை ராஜீவ்​ காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் உலக செவிலியர் தினத்தை பிளாரன்ஸ் நைட்​டிங்​கேல் உரு​வப் படத்தை கோல​மாக இட்டு செவிலியர்​கள் கொண்​டாடினர்.

பாமக தலை​வர் அன்​புமணி: மனித தேவதைகளாக மாறி மருத்​து​வப் பணி செய்​யும் செவிலியர்​கள் அனை​வருக்​கும் எனது வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

உயிருக்​குப் போராடும் நோயாளி​களைகாப்​பாற்​றும் மருத்​து​வர்​கள் மனித கடவுள் என்​றால், நோயாளி​களை அன்​பு, கனிவு, அக்​கறை காட்​டி​யும், ஆறு​தல் அளித்​தும் கவனித்​துக்​கொள்​ளும் செவிலியர்​கள்​தான் மனித தேவதைகள்.

எந்​த​வித வெறுப்​பும், சலிப்​பும் இல்​லாமல் மனிதர்​களுக்கு சேவை செய்​யும் செவிலியர்​களின் உழைப்​பும், தியாக​மும் போற்​றப்பட வேண்​டும். அவர்​களை இந்த நாளில் வணங்​கு​வோம்; நன்றி செலுத்​து​வோம்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: மருத்​து​வ​மனை​யின் இன்​றியமை​யாத பணி​யாளர்​களாக​வும், மனிதநே​யத்​தின் உயிர்​நாடி​யாக​வும் திகழும் செவிலியர்​கள் அனை​வருக்​கும் உலக செவிலியர் தின நல்​வாழ்த்​துகளை தெரி​வித்​துக்​கொள்​கிறேன்.

அன்​பு, தியாகம், பொறுப்பு ஆகிய​வற்றை அடிப்​படை​யாகக் கொண்​டு, தங்​களின் உயிரை​யும் பொருட்​படுத்​தாமல் மக்​களின் உயிர்​களைப் பாது​காக்​கும் தன்​னலமற்ற பணி​யில் ஈடு​பட்​டு​வரும் செவிலியர்​களின் சேவை மனப்​பான்​மையை எந்​நாளும் போற்றி வணங்​கு​வோம்.

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ: நோயாளி​களைக் காப்​பாற்ற மருந்து இருந்​தால் மட்​டும் போதாது. நோயின் தன்மை அறிந்​து, நோயாளி​களை தேற்​றும் தாயுள்​ளம் வேண்​டும். எனவே செவிலியர்​கள் தாய்க்கு நிக​ரானவர்​கள்.

தற்​போது ஆண் செவிலியர்​களும் இப்​பணி​யில் இருக்​கிறார்​கள். சாதி மதங்​களுக்கு அப்​பாற்​பட்​டு, தாய்க்கு நிக​ரான அன்​பும் பரி​வும் கொண்​டு, பொறுமை​யுடன் ஆற்​றும் அரும்​பணி​தான் செவிலியர் பணி. புனித​மான சேவை​யில் ஈடு​பட்​டுள்ள செவிலியர்​களுக்கு செவிலியர் நாள்​ நல்​வாழ்த்​துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in