போலீஸார் சாட்சியம் அளிக்கச் செல்லும்போது சீருடை, சுய ஒழுக்கம் இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

Updated on
1 min read

சென்னை: நீ​தி​மன்​றங்​களில் சாட்​சி​யம் அளிக்​கச் செல்​லும் போலீ​ஸார் முறை​யான சீருடை​யில் சுய ஒழுக்​கம், அர்ப்​பணிப்பு உணர்​வுடன் செல்​லா​விட்​டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சுற்​றறிக்கை பிறப்​பி்க்​கு​மாறு தமிழக டிஜிபிக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்டு​உள்​ளது.

கடந்த 2014 நவம்​பரில் ஒரு குற்ற வழக்​கில் சாட்​சி​யம் அளிப்​ப​தற்​காக திருக்​கோ​விலூர் குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் விழுப்​புரம் மாவட்​டம் அரகண்​டநல்​லூர் காவல் நிலைய சிறப்பு எஸ்​.ஐ. ஆறு​முகம் ஆஜரா​னார். அவர் மது​போதை​யில் இருந்​தது கண்​டறியப்​பட்​டது. மருத்​து​வப் பரிசோதனை​யில் இது உறுதி செய்​யப்​பட்​ட​தால், கடந்த 2015-ல் அவருக்கு கட்​டாய ஓய்வு அளிக்​கப்​பட்​டது.

இதை எதிர்த்து விழுப்​புரம் டிஐஜி​யிடம் அவர் மேல்​முறை​யீடு செய்​தார். இதையடுத்​து, கடந்த 2016-ல் கட்​டாய ஓய்வு நடவடிக்கை ரத்து செய்​யப்​பட்​டு,3 ஆண்​டு​களுக்​கான ஊதிய உயர்வை மட்​டும் நிறுத்தி தண்​டனை குறைக்​கப்​பட்​டது. மீண்டும் பணி​யில் சேர்ந்த ஆறு​முகம், நிறுத்தி வைக்​கப்​பட்ட ஊதிய உயர்வை வழங்​கக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த தனி நீதிப​தி, மனு​தா​ரர் மது​போதை​யில் இருந்​ததை நிரூபிக்​கும் வகை​யில் சிறுநீர், ரத்​தப் பரிசோதனை செய்​யப்​பட​வில்லை என்று கூறி, ஊதிய உயர்வு நிறுத்​தப்​பட்ட உத்​தரவை ரத்து செய்​தார். தனி நீதிப​தி​யின் இந்த உத்​தரவை எதிர்த்து தமிழக டிஜிபி, விழுப்​புரம் டிஐஜி, கடலூர் எஸ்​.பி. தரப்​பி்ல் உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. மேல்​முறை​யீட்டு வழக்கை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், என்​.செந்​தில்​கு​மார் அமர்வு விசா​ரித்​தது.

இதையடுத்​து, நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: நீதி​மன்​றத்​தில் ஆஜரான சிறப்பு எஸ்​.ஐ. ஆறு​முகம் போதை​யில் இருந்​தார் என்​ப​தற்​கு, அவரைப் பரிசோ​தித்த மருத்​துவ அதி​காரி​யின் சான்றே போது​மானது. ஒரு காவல் உதவி ஆய்​வாளர் போதை​யில் சாட்​சி​யம் அளித்​ததை ஒரு​போதும் சகித்​துக்​கொள்ள முடி​யாது. எனவே, தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவு ரத்து செய்​யப்​படு​கிறது.

‘நீ​தி​மன்​றங்​களில் சாட்​சி​யம் அளிக்​கச் செல்​லும் போலீ​ஸார் முறை​யான சீருடை​யில் சுய ஒழுக்​கம், அர்ப்​பணிப்பு உணர்​வுடன் செல்ல வேண்​டும். இல்​லா​விட்​டால் துறை ரீதி​யாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும்’ என்று தமிழக டிஜிபி 4 வாரங்​களில் சுற்​றறிக்கை பிறப்​பி்க்க வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​வி்ட்​டுள்​ளனர்​.

<div class="paragraphs"><p>சென்னை உயர் நீதிமன்றம்</p></div>
முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது - நடந்தது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in