அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதி செய்து நிர்வாக உத்தரவு பிறப்பிக்க கோரி வழக்கு

மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க 8 வார கெடு
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதி செய்து நிர்வாக உத்தரவு பிறப்பிக்க கோரி வழக்கு
Updated on
1 min read

சென்னை: அரசு நிகழ்ச்​சிகளி்ல் முதலில் தமிழ்த்​தாய் வாழ்த்து பாடு​வதை உறுதி செய்து நிர்​வாக உத்​தரவு பிறப்​பிக்​கு​மாறு தொடரப்​பட்ட வழக்​கில், மத்​திய, மாநில அரசுகள் 8 வார காலத்​தில் பதில் அளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தவெக அரசு பதவியேற்பு மற்றும் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது முதலில் வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவை பாடப்பட்டு பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப் பட்டது. அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், சென்​னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தொடர்ந்த பொதுநல வழக்​கில் கூறி​யுள்​ள​தாவது: தமிழகத்​தில் நடை​பெறும் அனைத்து அரசு நிகழ்​வு​களி​லும் முதலில் தமிழ்த்​தாய் வாழ்த்து பாடப்​பட்​டு, விழா முடி​வில் தேசிய கீதம் பாடப்​படு​வதே மரபாக இருந்து வரு​கிறது. ஆனால், முதல்​வர் விஜய் மற்​றும் அமைச்​சர்​கள் பதவி​யேற்ற விழா​வில் முதலில் வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், 3-வ​தாக தமிழ்த்​தாய் வாழ்த்து பாடப்​பட்​டது.

தமிழர்​களின் உணர்​வு, அடை​யாளம், கலாச்​சா​ரத்​தின் பிர​திபலிப்​பாக விளங்​கும் தமிழ்த்​தாய் வாழ்த்து பாடலை கடைசி​யாக பாடு​வது நமது மரபை நீர்த்​துப்​போகச் செய்​யும் வகை​யில் உள்​ளது. எனவே, தமிழகத்​தில் நடை​பெறும் அனைத்து அரசு நிகழ்​வு​களி​லும் முதலில் தமிழ்த்​தாய் வாழ்த்து பாடு​வதை உறுதி செய்​யும் வகை​யில் நிர்​வாக ரீதியி​லான உத்​தர​வு​களைப் பிறப்​பிக்க மத்​திய, மாநில அரசுகளுக்கு உத்​தர​விட வேண்​டும்.

வந்தே மாதரம், தேசிய கீதம்: அத்​துடன், ‘வந்தே மாதரம் மற்​றும் தேசிய கீதம் பாடியே அரசு நிகழ்​வு​களைத் தொடங்க வேண்​டும்’ என மத்​திய உள்​துறை அமைச்​சகம் கடந்த ஜன.28-ம் தேதி பிறப்​பித்த சுற்​றறிக்​கையை ரத்து செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. தலைமை நீதிபதி எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​தது. இதுதொடர்​பாக மத்​திய, மாநில அரசுகள் 8 வார காலத்​தில் பதில் அளிக்க வேண்​டும் என உத்​தர​விட்டு வி​சா​ரணை​யை நீதிப​தி​கள்​ தள்​ளிவைத்​தனர்​.

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதி செய்து நிர்வாக உத்தரவு பிறப்பிக்க கோரி வழக்கு
ஸ்பேஸ் எக்ஸ் பங்குகள் 21% உயர்வு: உலகின் முதல் ‘டிரில்லியன் அதிபர்’ ஆனார் எலான் மஸ்க்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in