ஆடிப்பூர திருவிழாவில் பெரியாழ்வார் மங்களாசாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கோலாகலம்

14-ம் தேதி தேரோட்ட விழாவுக்கு சிறப்பு ஏற்பாடு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் பெரியாழ்வார் மங்களாசாசனம் நேற்று நடைபெற்றது. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஆண்டாள் ரெங்கமன்னார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் பெரியாழ்வார் மங்களாசாசனம் நேற்று நடைபெற்றது. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஆண்டாள் ரெங்கமன்னார்.

Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீ​வில்​லிபுத்​தூர் ஆண்​டாள் கோயில் ஆடிப்​பூரத் திரு​விழா​வில் பெரி​யாழ்​வார் மங்​களா​சாசன உற்​சவம் நேற்று நடை​பெற்​றது. இதில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்​டாள் கோயி​லில் பிரசித்தி பெற்ற ஆடிப்​பூரத் தேரோட்​டத் திரு​விழா ஆக.6-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. முதல் நாள் இரவு 16 வண்டி சப்​பர​மும், 4-ம் நாள் விழா​வான நேற்று முன்​தினம் இரவு ரெங்​கமன்​னார் கோவர்த்​தனகிரி கிருஷ்ணர் அலங்​காரத்​தி​லும், ஆண்​டாள் சேஷ வாக​னத்​தி​லும் எழுந்​தருளிபக்​தர்​களுக்கு அருள் பாலித்​தனர்.

விழா​வின் முக்​கிய நிகழ்​வு​களில் ஒன்​றான பெரி​யாழ்​வார் மங்​களா​சாசனம் நேற்று நடை​பெற்​றது. அதி​காலை 12 மணி அளவில் ஆடிப்​பூரக் கொட்​டகை​யில் பெரி​யாழ்​வார் எழுந்​தருளி​னார். அதன்​பின் தனித்​தனி பல்​லக்​கில் எழுந்​தருளிய பெரிய பெரு​மாள், கள்ளழகர் கோயில் சுந்​தர்​ராஜ பெரு​மாள், திரு​வண்​ணா​மலை ஸ்ரீநி​வாசப் பெரு​மாள், நின்ற நாராயணப் பெரு​மாள் கோயில் திருத்​தங்​கல் அப்​பன் ஆகியோ​ருக்கு பெரி​யாழ்​வார் மங்​களா​சாசனம் செய்து வைத்​தார்.

அதை தொடர்ந்து மூக்​குத்தி சேவை​யில் ரெங்​கமன்​னார் உடன் எழுந்​தருளிய ஆண்​டாள் தாயாருக்கு பெரி​யாழ்​வார் மங்​களா​சாசனம் செய்து வைத்​தார். இதனை ஆயிரக்கணக்​கான பக்​தர்​தரிசனம் செய்​தனர்.

இரவு 10 மணிக்கு மேல் 5 கருடசேவை நடை​பெற்​றது. இதில் 5 பெருமாள்களும் கருட வாகனங்​களி​லும், ஆண்டாள் பெரிய அன்ன வாக​னத்​தி​லும், பெரி​யாழ்​வார் சிறிய அன்ன வாக​னத்​தி​லும் எழுந்​தருளி, ரத வீதி​களில் வீதி உலா வந்தனனர்.

7-ம் நாள் விழா​வான நாளை (ஆக.12) இரவு கிருஷ்ணன்​கோ​விலில் ஆண்​டாள் மடி​யில் ரெங்​கமன்​னார் சயனத்​திருக்​கும் சயன சேவை உற்​சவம் நடை​பெறுகிறது. உச்ச நிகழ்​வான ஆடிப்​பூரத் தேரோட்ட விழா ஆக14-ம் தேதி நடை​பெறுகிறது. விழாவுக்​கான சிறப்பு ஏற்​பாடு​களை செயல் அலு​வலர் சர்க்​கரை​யம்​மாள் மற்​றும் அறநிலை​யத்​துறை அதி​காரி​கள்​ செய்​து வருகின்​றனர்​.

<div class="paragraphs"><p>ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் பெரியாழ்வார் மங்களாசாசனம் நேற்று நடைபெற்றது. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஆண்டாள் ரெங்கமன்னார்.</p></div>
கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: 77 பேர் உயிரிழப்பு, கட்டிடங்கள் இடிந்து சேதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in