புதிய எம்எல்ஏக்களுக்கு 2 நாள் புத்தாக்க பயிற்சி: சட்டப்பேரவைத் தலைவர் தகவல்

புதிய எம்எல்ஏக்களுக்கு 2 நாள் புத்தாக்க பயிற்சி: சட்டப்பேரவைத் தலைவர் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழக எம்​எல்​ஏக்​களுக்கு 2 நாள் புத்​தாக்​கப் பயிற்சி சென்​னை​யில் வழங்​கப்பட உள்​ளது. இதில் அனை​வரும் பங்​கேற்க வேண்​டுமென சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் கூறி​னார்.

தமிழகத்​தில் நடந்​து​ முடிந்த சட்​டப்​பேரவை தேர்​தலில், தவெக அதிக இடங்​களில் வெற்​றி​பெற்று ஆட்சி அமைத்​துள்​ளது. தற்​போதைய 229 எம்​எல்​ஏக்​களில் சுமார் 145 பேர் (60%) புது​முகங்​களாக இருக்​கின்​றனர். இதில் தவெக​வில் மட்​டும் 101 பேர் முதல்​முறை​யாக எம்​எல்ஏ ஆகி​யுள்​ளனர். இதற்​கிடையே சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் ஆளுநர் உரை​யுடன் வரும் ஜூன் 18-ம் தேதி தொடங்​க​வுள்​ளது. அதற்கு முன்​ன​தாக எம்​எல்​ஏக்​களுக்கு சட்​டப்​பேரவை நடவடிக்​கைகள் குறித்து 2 நாள் பயிற்சி வழங்​கப்பட உள்​ளது.

இதுகுறித்து சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் செய்தியாளர்களிடம் கூறிய​து: ஒவ்​வொரு முறை​யும் தேர்​தல் முடிந்து சட்​டப்​பேரவை கூடு​வதற்கு முன்​பாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அனைத்து எம்​எல்​ஏக்​களுக்​கும் புத்​தாக்​கப் பயிற்சி வழங்​கப்​படு​வது வழக்​கம். அதன்​படி இந்த முறை​யும் 17-வது சட்​டப்​பேர​வைக்கு தேர்​வான அனைத்து எம்​எல்​ஏக்​களுக்​கும் இரு​நாள் பயிற்சி முகாம் சென்னை கலை​வாணர் அரங்​கத்​தில் ஜூன் 16, 17-ம் தேதி​களில் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை நடத்​தப்பட உள்​ளது. முதல்​வர் தொடங்கி வைக்​கிறார். இதில் பேரவை விதி​களுக்​குட்​பட்டு உறுப்​பினர் எப்​படி நடந்து கொள்ள வேண்​டும் என்​பதை பற்​றிய முழு விவரங்​களும் அவர்​களுக்கு பயிற்​சி​யில் விவரிக்​கப்​படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய எம்எல்ஏக்களுக்கு 2 நாள் புத்தாக்க பயிற்சி: சட்டப்பேரவைத் தலைவர் தகவல்
எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in