மாணவி கொலை வழக்கு: கைதிக்கு ஆவணங்களை வழங்க உத்தரவு

மாணவி கொலை வழக்கு: கைதிக்கு ஆவணங்களை வழங்க உத்தரவு
Updated on
1 min read

மதுரை: தூத்​துக்​குடி மாவட்​டம் விளாத்​தி​குளம் வேடநத்​தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கொலையில் சாயல் ​குடியைச் சேர்ந்த தர்​ம​முனீஸ்வரனுக்கு மே 25-ல் தூக்​குத் தண்​டனை விதிக்​கப்​பட்​டது. இந்த தண்​டனையை உறு​திப்​படுத்​தக்​கோரி தமிழக அரசு சார்​பில் உயர் நீதி​மன்ற மதுரைஅமர்​வில் மனுத் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை நீதிப​தி​கள் என்​.ஆனந்த்வெங்​கடேஷ், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்​வு விசா​ரித்தது.

மதுரை மத்​திய சிறை​யில் இருந்​த​படி தர்​ம​முனீஸ்​வரன் காணொலி வாயி​லாக நீதி​மன்​றத்​தில் ஆஜரானர். அப்​போது விசா​ரணை நீதி​மன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்​யக்​கோரி மேல்​முறை​யீடு மனுத் தாக்​கல் செய்​யப்​போவ​தாக அவர் தெரி​வித்​தார். இதையடுத்து நீதிப​தி​கள், கொலை வழக்கு தொடர்​பான ஆவணங்​களை அவருக்கு வழங்க உத்தரவிட்டு வி​சா​ரணை ஜூன் 12-ம் தேதிக்கு தள்​ளி வைத்து உத்தரவிட்டனர்.

மாணவி கொலை வழக்கு: கைதிக்கு ஆவணங்களை வழங்க உத்தரவு
சீமைக் கருவேல மரங்களை அகற்றாவிட்டால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in