சீமைக் கருவேல மரங்களை அகற்றாவிட்டால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

மதுரை: சீமைக் கரு​வேல மரங்​களை அகற்ற நடவடிக்கை எடுக்​காத மாவட்ட ஆட்​சி​யர்​கள் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும் என உயர் நீதி​மன்​றம் எச்​சரித்​துள்​ளது.

தமிழகம் முழு​வதும் சீமைக் கரு​வேல மரங்​களை அகற்​றக்​கோரி மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ உள்​ளிட்​டோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத் தாக்​கல் செய்​தனர். இந்த மனுவை நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், பரத சக்​கர​வர்த்தி அமர்வு விசா​ரித்து மாநிலம் முழு​வதும் 6 மாதங்​களில் சீமைக் கரு​வேல மரங்​களை அகற்ற வேண்​டும்.

இதை மாவட்ட அளவில் கண்​காணிக்க அலு​வலர்​களை நியமிக்க வேண்​டும் என்​பது உள்பட பல்​வேறு உத்​தர​வு​களைப் பிறப்​பித்​தது. இந்த வழக்கு அதே நீதிப​தி​கள் அமர்​வில் மீண்​டும் விசாரணைக்கு வந்​தது. பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: மாநிலம் முழு​வதும் சீமைக் கரு​வேல மரங்​களை வேருடன் அகற்ற வேண்​டும்.

இப்​பணிக்​காக அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களும் ஆர்​டிஓ தகு​தி​யில் உள்ள மாவட்ட அலு​வலரை நியமிக்க வேண்​டும். மாவட்ட அளவில் கண்​காணிப்பு அலு​வலர்​களை நியமிக்​காத மாவட்ட ஆட்​சி​யர்​கள் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கப்​படும். ஆட்​சி​யர் ஆஜராக உத்​தர​விடப்​படும்.

மாநிலம் முழு​வதும் சீமைக் கரு​வேல மரங்​களை அகற்ற எடுக்​கப்​பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்​சி​யர்​கள் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். வி​சா​ரணை ஜூலை மாதத்​துக்கு தள்ளிவைக்​கப்​படு​கிறது. இவ்​வாறு உத்​தர​விட்​டனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
புதிய அரசியல் இயக்கம்: அண்ணாமலை அறிவிப்பு; 10 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள் பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in