தனியார் மருந்து நிறுவனத்துக்கு எதிரான புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

தனியார் மருந்து நிறுவனத்துக்கு எதிரான புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ஆலத்​தூர் சிட்கோ வளாகத்​தில் கரும்​புகை வெளி​யேற்றி சுற்​றுச்​சூழலுக்கு பாதிப்பை ஏற்​படுத்​தும் தனி​யார் மருந்து நிறு​வனத்​துக்கு எதி​ரான புகாரை பரிசீலி்த்து 8 வாரங்​களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

செங்​கல்​பட்டு மாவட்​டம் ஆலத்​தூர் சிட்கோ வளாகத்​தில் அமைந்​துள்ள ‘அன்​ஜன் டிரக்​ஸ்’ என்ற தனி​யார் மருந்து நிறு​வனத்​தில் இருந்து வெளி​யேறும் கரும்​பு​கை​யால் சுற்​றுச்​சூழல் மாசடைந்​துள்​ள​தாக​வும், அந்த ஆலை​யி்ல் இருந்து வெளி​யேற்​றப்​படும் கழி​வுநீ​ரால் நிலத்​தடி நீர் வெகு​வாக பாதிக்​கப்​பட்டு வரு​வ​தாக​வும் ‘அட்​வான்​ஸ்டு பயோடெக் ப்ராடக்ட்​ஸ்’ என்ற மருத்​துவ அறுவை சிகிச்சை உபகரணங்​களை தயாரிக்​கும் நிறு​வனம் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்​பா​யத்​தில் வழக்கு தொடர்ந்​தது.

இந்த வழக்கு தென்​மண்டல பசுமை தீர்ப்​பாய நீதித்​துறை உறுப்​பினர் புஷ்பா சத்​ய​நா​ராயணா தலை​மையி​லான அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஆர்​.​முரு​க​பார​தி, “மாசுக் கட்​டுப்​பாட்டு வாரி​யம், தமிழக அரசின் உயர​தி​காரி​களுக்கு ஆதா​ரங்​களு​டன் மனு அளித்​தும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை.

வெளி​யேறும் நச்​சுப்​பு​கை​யால் சுற்​று​வட்​டார கிராமங்​களில் பல்​வேறு பிரச்​சினை​கள் ஏற்​பட்டு வரு​கின்​றன. நிலத்​தடி நீர் மாசடைந்து விவ​சாய​மும் பாதி்க்​கப்​பட்​டுள்​ளது” என வாதிட்​டார்.

இதையடுத்​து, மனு​தா​ரர் தரப்​பில் அளிக்​கப்​பட்​டுள்ள மனுவை அரசின் கூடு​தல் தலை​மைச் செயலர், செங்​கை ஆட்​சி​யர் உள்​ளிட்டோர் 8 வார காலத்​தில் சட்ட விதி​களுக்கு உட்​பட்டு பரிசீலி்த்து உரிய நடவடிக்கை எடுக்க தென் மண்டல பசுமை தீர்ப்​பாயம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் மருந்து நிறுவனத்துக்கு எதிரான புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு
யானைகள் புத்துணர்வு முகாமை மீண்டும் தொடங்காதது ஏன்? - அறிக்கை அளிக்க வனத்துறைக்கு உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in