​திருச்​செங்​கோடு: பொங்​கல் விழா​வில் தவெக அருண்​ராஜின் அரசி​யல் பேச்​சுக்கு எதிர்ப்பு

​திருச்​செங்​கோடு: பொங்​கல் விழா​வில் தவெக அருண்​ராஜின் அரசி​யல் பேச்​சுக்கு எதிர்ப்பு
Updated on
1 min read

நாமக்​கல்: திருச்​செங்​கோட்​டில் நடை​பெற்ற பொங்​கல் பண்​டிகை விழா​வில் தவெக கொள்கை பரப்பு பொதுச் செய​லா​ளர் அருண்​ராஜின் அரசி​யல் பேச்​சுக்கு எதிர்ப்​புத் தெரிவிக்​கப்​பட்​ட​தால், பேச்சை பாதி​யிலேயே நிறைவு செய்​தார்.

திருச்​செங்​கோட்​டில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற பொங்​கல் பண்​டிகை சிறப்பு நிகழ்ச்​சிகளில் அருண்​ராஜ் கலந்து கொண்​டார். திருச்​செங்​கோடு நகராட்சி 11-வது வார்டு சின்​னப்​பாவடி தெரு​வில் நடை​பெற்ற பொங்​கல் விழா​வில் கலந்​து​கொண்ட அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தமிழகத்​தில் மதுக்​கடைகள் இருக்​கலாம். அதில் தவறில்​லை. விற்​பனையை அதி​கப்​படுத்த வேண்​டும் என்ற நோக்​கில் அரசு செயல்​படு​வது​தான் தவறு. படிப்​படி​யாக மதுக்​கடைகளை மூடு​வோம் என்று கூறிய திமுக, அதை நிறைவேற்​றிய​தா?” என்​றார்.

ஜனநாயகன் திரைப்​படம் மற்​றும் தூத்​துக்​குடி அஜிதா பிரச்​சினை குறித்து விஜய் எந்த கருத்​தும் சொல்​லாமல் இருக்​கிறாரே என்று செய்​தி​யாளர்​கள் கேள்வி எழுப்​பினர். அதற்​குப் பதில் சொல்​வதைத் தவிர்த்​து, பேட்​டியை நிறைவு செய்​தார்.

முன்​ன​தாக பொங்​கல் விழா விளை​யாட்​டுப் போட்​டிகளில் வெற்றி பெற்​றவர்​களுக்கு பரிசளித்து அருண்​ராஜ் பேசும்​போது, தவெக தலை​வர் விஜய் குறித்து பொது​மக்​களிடம் பல்​வேறு கேள்வி​களை எழுப்​பிக் கொண்​டிருந்​தார்.

அப்​போது சின்​னப்​பாவடி பொங்​கல் விழாக் குழு நிர்​வாகி தனசேகர் என்​பவர் குறுக்​கிட்​டு, “பொங்​கல் விழா பற்றி மட்​டும் பேசுங்​கள். அரசி​யல் பேச வேண்​டாம். அதற்​கென தனி மேடை போடுங்​கள் பேசுங்​கள். பொது​வான விழா நடக்​கும் இடத்​தில் உங்​கள் கட்சி அரசி​யலை இங்கு பேச வேண்​டாம்” என்​றார்.

இதையடுத்​து, வெற்றி பெற்​றவர்​களுக்கு வாழ்த்​துகள் என்று கூறி பேச்சை பாதி​யிலேயே நிறைவு செய்​தார். இந்த நிகழ்​வால் சிறிது நேரம் பரபரப்பு நில​வியது.

​திருச்​செங்​கோடு: பொங்​கல் விழா​வில் தவெக அருண்​ராஜின் அரசி​யல் பேச்​சுக்கு எதிர்ப்பு
வாகன விபத்தை தாக்குதலாக திரித்து வீடியோ வெளியீடு: தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in