அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: செவிலியர்கள் 3-வது நாளாக போராட்டம்

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: செவிலியர்கள் 3-வது நாளாக போராட்டம்
Updated on
1 min read

சென்னை: சு​கா​தா​ரத் துறை அமைச்​சருடன் நடந்த பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்​ப​டாத​தால், தமிழகம் முழு​வதும் செவிலியர்​கள் 3-வது நாளாக நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

பணி நிரந்​தரம் வழங்க வேண்​டும். சம வேலைக்கு சம ஊதி​யம் என்ற உயர் நீதி​மன்ற உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு செய்த மேல்​முறை​யீட்டை கைவிட வேண்​டும் என்​பது உள்ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தொகுப்​பூ​திய செவிலியர்​கள் கடந்த 18-ம் தேதி சென்னையில் உண்​ணா​விரத போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தமிழ்​நாடு செவிலியர்​கள் மேம்​பாட்டு கழகம் சார்​பில் நடந்த இந்த போராட்​டத்​தில் 750-க்​கும் மேற்​பட்டோர் பங்​கேற்றனர். அனை​வரை​யும் போலீ​ஸார் கைது செய்து அழைத்​துச் சென்று கிளாம்​பாக்​கத்​தில் இறக்​கி​விட்​டனர். இதையடுத்​து, கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​தில் அவர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். மீண்​டும் கைது செய்​து, ஊரப்​பாக்​கத்​தில் உள்ள திருமண மண்​டபத்​துக்கு கொண்டு செல்​லப்​பட்ட நிலை​யில், அங்​கும் போராட்​டம் தொடர்ந்​தது.

இதற்​கிடையே, சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யனுடன் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யில் எந்த உடன்​பாடும் ஏற்​ப​டாத​தால், நேற்று 3-வது நாளாக நந்​திவரம் கூடு​வாஞ்​சேரி ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் செவிலியர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அதே​போல, தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​கள், மாவட்ட தலைமை மருத்​து​வ​மனை​களில் நேற்று செவிலியர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதுபற்றி அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறும்​போது, “ஒப்​பந்த செவிலியர்​களுக்கு நிரந்தர செவிலியர் பணி​யிடங்​கள் கோரு​கின்​றனர். அந்த காலி பணி​யிடங்​களே இல்​லாத நிலை​யில், இந்த கோரிக்​கையை ஏற்க இயலாது. மக்​களின் பாதிப்பை உணர்ந்து செவிலியர்​கள் செயல்பட வேண்​டும்” என்​றார்.

இந்​நிலை​யில், செவிலியர்​களின் கோரிக்​கையை அரசு நிறைவேற்ற வேண்​டும் என்று அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வலி​யுறுத்தி உள்​ளனர்.

பாமக நிறு​வனர் ராம​தாஸ்: மக்​கள்​தொகை அதி​கரிப்​பும், நோய்​களின் தாக்​க​மும் அதி​கரித்து வரும் நிலை​யில் பொது​மக்​கள் அரசு மருத்​து​வ​மனை​களுக்கு அதிக அளவில் வரத் தொடங்​கி​யுள்​ளனர். இந்த சூழலில், செவிலியர்​களின் தேவை​யும் அதி​க​மாக இருக்​கிறது. எனவே, காலி பணி​யிடங்​களை நிரப்​புவதோடு, தேவைப்​படும் மருத்​து​வ​மனை​களில் கூடு​தல் பணி​யிடங்​களை ஏற்​படுத்​தி, தொகுப்​பூ​தி​யம் மற்​றும் ஒப்​பந்த அடிப்​படை​யில் பணிபுரி​யும் அனைத்து செவிலியர்​களை​யும் உடனடி​யாக பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும்.

தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா: சம வேலைக்கு சம ஊதி​யம் என்ற நீதி​மன்ற உத்​தரவை எதிர்த்து அரசு மேல்​முறை​யீடு செய்​தது மன்​னிக்க முடி​யாத குற்​றம் என செவிலியர்​கள் ஆதங்​கப்​படு​கின்​றனர். எனவே, கைது செய்​யப்​பட்டு தனி​யார் மண்​டபத்​தில் அடைத்து வைக்​கப்​பட்​டுள்ள அனைத்து செவிலியர்​களை​யும் நிபந்​தனை​யின்றி உடனே விடுவிக்க வேண்​டும். பிர​தி​நி​தி​களை அழைத்​துப் பேசி, நியாய​மான கோரிக்​கைகளை நிறைவேற்ற வேண்​டும்.

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: செவிலியர்கள் 3-வது நாளாக போராட்டம்
“தென்னிந்தியாவில் பாஜக வளர்ந்து வருகிறது” - தேசிய செயல் தலைவர் நிதின் நிபின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in