மின்மாற்றிகள் கொள்முதல் ​​முறைகேடு; செந்தில் பாலாஜிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை - நீதிமன்றத்தில் அரசு தகவல்

 செந்தில் பாலாஜி | கோப்புப்படம்

செந்தில் பாலாஜி | கோப்புப்படம்

Updated on
2 min read

சென்னை: மின்​மாற்​றிகள் கொள்​முதல் செய்​த​தில் அரசுக்கு இழப்பு ஏற்​படுத்தி ரூ. 397 கோடி முறை​கேடு செய்​த​தாக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி்க்கு எதி​ரான புகாரில் முகாந்​திரம் இல்லை என்​ப​தால் அதை முடித்து வைத்து விட்​ட​தாக அரசு தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது.

தமிழகத்​தில் சுமார் 45 ஆயிரம் மின் மாற்​றிகளை கொள்​முதல் செய்​ததன் மூலம் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்​படுத்​தி​யுள்​ள​தாக​வும், இந்த முறைகேடு தொடர்​பாக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, டான்​ஜெட்கோ தலை​வர் மற்​றும் நிர்​வாக இயக்​குந​ரான ராஜேஷ் லக்​கானி உள்​ளிட்​டோருக்கு எதி​ராக சந்​தேகம் கொள்​ளத்​தக்க வகை​யில் வலு​வான ஆதா​ரங்​கள் இருப்​ப​தால் இதுதொடர்​பாக சிறப்பு புல​னாய்​வுக்​குழு அமைத்து விசா​ரணை நடத்த லஞ்ச ஒழிப்​புத்​துறைக்கு உத்​தர​விட வேண்​டும் என கோரி அதி​முக வழக்​கறிஞரணி துணைச் செய​லா​ள​ரான இ.சர​வணன் மற்றும் அறப்​போர்இயக்​கம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன.

இந்த வழக்​கில் டான்​ஜெட்கோ தரப்​பில் ஏற்​கெனவே தாக்​கல் செய்​யப்​பட்ட பதில் மனுவில், ‘ஒவ்​வொரு மின்​மாற்​றிக்​கும் தலா ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விலை குறைக்​கப்​பட்டு கொள்முதல் செய்​யப்​பட்​ட​தால் அரசின் பணம் விரய​மா​காமல் செலவு மிச்​சப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதில் முறை​கேடு நடந்​துள்​ள​தாக​வும் அதன்​மூலம் ரூ.397 கோடி இழப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக​வும் கூறு​வதற்கு எந்த முகாந்​திர​மும் இல்​லை” என தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று இறுதி விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது லஞ்ச ஒழிப்​புத்​துறை தரப்​பில், மின் மாற்​றிகள் கொள்​முதல் செய்​ததன் மூலம் அரசுக்கு ரூ.397 கோடி அளவுக்கு இழப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக கூறும் குற்​றச்​சாட்​டு​களுக்கு எந்த முகாந்​திர​மும் இல்லை என்​ப​தால், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோருக்கு எதி​ராக அளிக்​கப்​பட்டபுகார்​கள் முடித்து வைக்​கப்​பட்​டு​விட்​ட​தாக கூறி அறிக்கைதாக்​கல் செய்​யப்​பட்​டது.

அதற்கு கடும் ஆட்​சேபம் தெரி​வித்த அறப்​போர் இயக்​கம் சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர் சுரேஷ், “மின்​மாற்​றிகளுக்​கான கொள்​முதல் டெண்​டரில் 30 பேர்ஒரே விலையை குறிப்​பிட்​டுள்​ளனர். அதன் மூல​மாகத்​ தான் ரூ.397 கோடிக்கு இழப்பு ஏற்​படுத்​தப்​பட்டு முறை​கேடு நடந்​துள்​ளது. கடந்த 2023-ம் ஆண்டு அளிக்​கப்​பட்ட இந்த புகாரை விசா​ரித்த லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் குற்​றச்​சாட்​டுக்கு முகாந்​திரம் இருப்​ப​தாகக் கூறி விரி​வான புலன் விசா​ரணை நடத்த அரசிடம் அனு​மதி கோரி கடிதம் எழு​தி​யிருப்​ப​தாக தெரி​வித்​தது.

அந்த கடிதத்தை 2 ஆண்​டு​களாக பரிசீலித்த ஊழல் தடுப்பு ஆணை​யர், இது தொடர்​பாக ஆரம்​பகட்ட விசா​ரணை நடத்த உத்​தர​விட்​டார். தற்​போது இந்த புகாரில் முகாந்​திரம் இல்லை எனக் கூறி புகாரைமுடித்து வைத்​து​விட்​ட​தாக லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் கூறு​வது முழு பூசணியை சோற்​றில் மறைப்​பது போல் உள்​ளது” என வா​திட்​டார். அவரது வாதம் முடிவடை​யாத​தால்​ இந்​த வழக்​கு வி​சா​ரணை​யை நீதிப​தி​கள்​ இன்​றைக்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்.

<div class="paragraphs"><p> செந்தில் பாலாஜி | கோப்புப்படம்</p></div>
​தேர்தலையொட்டி தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் மதுக்கடைகள் மூடல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in