விழுப்புரம் அருகே ஒட்டனந்தல் முருகன் கோயிலில் 9 எலுமிச்சம் பழங்கள் ரூ.1.43 லட்சத்துக்கு ஏலம்

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் முருகன் கோயில் வேலில் படைக்கப்பட்ட எலுமிச்சம் பழம் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் முருகன் கோயில் வேலில் படைக்கப்பட்ட எலுமிச்சம் பழம் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated on
1 min read

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமம் இரட்டைக் குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோயில் உள்ளது. கருவறையில் வேல் மட்டுமே இருக்கும். இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்​குனி உத்​திர திரு​விழா உற்​சவத்​தில்வேலில் தினசரி படைக்​கப்​படும் 9 எலுமிச்​சம் பழங்கள், இடும்​பன் பூஜை​யில் வைத்து ஏலம் விடும்நிகழ்வு நேற்று முன்​தினம் நள்​ளிரவு நடை​பெற்​றது. முதல் நாள் எலுமிச்​சம் பழம், ரூ.45 ஆயிரத்து 500-க்கு ஏலம் போனது.

இதே​போல் இதர 8 பழங்​களும் ரூ.15 ஆயிரம், ரூ.16 ஆயிரத்​துக்கு ஏலம் போனது. இதன்​மூலம் 9 எலுமிச்​சம் பழங்​களை​யும் ரூ.1 லட்​சத்து 43 ஆயிரத்​துக்கு பக்​தர்​கள் ஏலம் எடுத்​தனர்.

வேலில் சொரு​கப்​பட்ட எலுமிச்​சம் பழத்தை உட்​கொண்​டால், குழந்தை வரம், திரு​மணம் கைகூடு​தல் மற்​றும் குடும்ப பிரச்​சினை​கள் நீங்​கும் என்​பது இக்​கோ​யிலுக்கு வரும் பக்​தர்​களின் நம்​பிக்​கை​யாகும்.

ஏலத்​தில், விழுப்​புரம் மட்​டுமின்றி பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்​தும் பக்​தர்​கள் பங்​கேற்​றனர். எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்​தவர்​கள், தங்​கள் உடலில் தண்​ணீரை ஊற்​றிக் கொண்டு பூசாரி முன்பு மண்​டி​யிட்டு எலுமிச்​சம் பழத்தை பெற்​றுக் கொண்​டனர். இடும்​பனுக்கு படைக்​கப்​பட்ட கரு​வாட்டு குழம்பு சாதம் பிர​சாத​மாக அனை​வருக்​கும் வழங்​கப்​பட்​டது.

<div class="paragraphs"><p>திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் முருகன் கோயில் வேலில் படைக்கப்பட்ட எலுமிச்சம் பழம் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.</p></div>
லால்குடி தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் உறவினர் வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in