தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம்; காஞ்சியில் செமிகண்டக்டர் ஆலை - முதல்வர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள் என்ன?

தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம்; காஞ்சியில் செமிகண்டக்டர் ஆலை - முதல்வர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள் என்ன?
Updated on
2 min read

சென்னை: ‘‘தூத்​துக்​குடி​யில் சூப்​பர் கிரிட்​டிக்​கல் அனல்​மின் நிலை​யம் ரூ.20,800 கோடி​யில் நிறு​வப்​படும். காஞ்​சி​யில் செமி கண்​டக்​டர் ஆலை அமைக்​கப்​படும்’’ என்​பது உட்பட பல்​வேறு முக்​கிய அறி​விப்​பு​களைச் சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் 110 விதி​யின் கீழ் புதிய மின்​கட்​டமைப்​பு​கள் அமைப்​பது தொடர்​பாக முதல்​வர் விஜய் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பு: தமிழகத்​தின் வளர்ந்து வரும் பொருளா​தா​ரம் மற்​றும் அதி​கரித்து வரும் மின் நுகர்வை கருத்​தில் கொண்​டு, மின் உற்​பத்​தி, மின் தொடரமைப்பு மற்​றும் மின் வினியோகத் துறை​களில் விரி​வான மேம்​பட்ட தொழில்​நுட்​பத்​துடன் கூடிய உலகத்​தரம் வாய்ந்த மின்​கட்​டமைப்பு அவசி​ய​மாகிறது.

தற்​போது மின் நுகர்வு தொடர்ந்து அதி​கரித்து வரு​வ​தால், மின் உற்​பத்தி நிலை​யங்​களில் உற்​பத்தி செய்​யப்​படும் மின்​சா​ரத்​தைச் சென்னை போன்ற முக்​கிய மின் நுகர்வு மையங்​களுக்​குத் திறம்பட கொண்டு செல்​வதற்​கான மின் தொடரமைப்பை மேம்​படுத்த வேண்​டும்.

இதற்​காக, அரசு தொலைநோக்​குடன் ரூ.33,066 கோடி​யில் ‘தமிழ்​நாடு மின் தொடரமைப்​புக் கட்​டமைப்பு மேம்​பாட்​டுத் திட்​டம்’ செயல்​படுத்​தப்பட உள்​ளது. இதன்​கீழ் 196 புதிய துணை மின் நிலை​யங்​கள் மற்​றும் அவற்​றுடன் தொடர்​புடைய 15 ஆயிரம் கிலோ மீட்​டர் நீள​முடைய புதிய மின்​பாதைகள் அமைக்​கப்​படும். ஏற்​கெனவே உள்ள மின் பாதைகள் வலுப்​படுத்​தப்​படும்.

தமிழகம் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தித் துறை​யில் முன்​னணி மாநில​மாக திகழ்ந்​து, காற்​றாலை, சூரிய மின்​சா​ரம் மற்​றும் மின்கல சேமிப்பு போன்ற துறை​களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரு​கிறது. இந்த ஆற்​றல் ஆதா​ரங்​கள் சமச்​சீ​ராகக் கிடைப்​ப​தில்​லை.

புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி உற்​பத்​தி​யில் இருந்து பெறப்​படும் உபரி மின்​சா​ரத்​தைப் பேட்​டரி​களில் சேமித்து வைத்து இரவு நேரங்​களில் தேவைக்​கேற்ப பயன்​படுத்​தும் தொழில்​நுட்​பம் தற்​போது உள்​ளது. எனினும், இந்த கட்​டமைப்பு அனைத்து நேரங்​களி​லும் உள்ள மின்​தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது.

எனவே, மின்​தேவை அதி​க​மாக இருக்​கும் காலங்​களில் தடையற்ற மின்​சா​ரத்தை வழங்க அனல்​மின் உற்​பத்​தி​யையே பெரிதும் நம்​பி​யிருக்க வேண்​டி​யுள்​ளது.

கடந்த 5 ஆண்​டு​களில் தமிழகத்​தில் புதிய அனல் மற்​றும் நீர்​மின் நிலை​யங்​கள் அமைப்​ப​தற்​குப் பெரிய அளவில் முதலீடு​கள் மேற்​கொள்​ளப்​பட​வில்​லை. தொடர்ந்து அதி​கரித்து வரும் மின் சுமை​யைத் திறம்பட கையாள்​வதற்​கும், மின் தேவையைப் பூர்த்தி செய்​வதற்​கும், மின் உற்​பத்​தித் துறை​யில் முதலீடு​களை மேற்​கொள்​வது முக்​கிய​மான​தாகும்.

தூத்​துக்​குடி அனல் மின் நிலை​யம் தமிழகத்​தின் முக்​கிய அனல் மின் நிலை​யங்​களில் ஒன்​றாகும். இங்கு தற்​போது தலா 210 மெகா​வாட் திறன் கொண்ட 5 நிலக்​கரி அடிப்​படையி​லான உற்​பத்தி அலகு​கள் உள்​ளன. இவற்​றின் மொத்த நிறுவு திறன் 1,050 மெகா​வாட் ஆகும். இந்த அலகு​கள் 1979-ம் ஆண்டு முதல் படிப்​படி​யாக இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

நிலக்​கரி அடிப்​படையி​லான அனல் மின் நிலை​யங்​களுக்​குப் பொருந்​தக் கூடிய சுற்​றுச்​சூழல் விதி​களுக்கு ஏற்ப தற்​போதுள்ள அலகு​களைப் படிப்​படி​யாக மாற்​றியமைக்க திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது.

தற்​போதுள்ள 5 அலகு​களைப் படிப்​படி​யாக மாற்​றியமைத்​து, தூத்​துக்​குடி அனல் மின் நிலைய வளாகத்​தில், பொது மற்​றும் தனி​யார் கூட்​டாண்மை முறை​யில், தலா 800 மெகா​வாட் திறன் கொண்ட 2 அலகு​களு​டன், மொத்​தம் 1,600 மெகா​வாட் திறன் கொண்ட சூப்​பர் கிரிட்​டிக்​கல் அனல் மின்​நிலை​யம் ரூ.20,800 கோடி​யில் நிறு​வப்​படும்.

மின் பகிர்​மானம்: சென்னை மாநகரின் மின்​தேவையைப் பூர்த்தி செய்ய வலு​வான மின் பகிர்​மானக் கட்​டமைப்பு அவசி​யம். சென்​னை​யில் பருவ மழைக்​காலங்​களில் வெள்​ளம் தொடர்​பாக ஏற்​படும் மின்​தடைகளை​யும், கோடை காலங்​களில் அதிக மின் தேவை காரண​மாக ஏற்​படும் சவால்​களை​யும் சந்​திக்க வேண்​டி​யுள்​ளது. இதைக் கருத்​தில் கொண்​டு, 36 புதிய துணை மின் நிலை​யங்​கள் அமைத்​தல், புதிய மின் பகிர்​மான மின்​மாற்​றிகளை நிறு​வுதல், சேதமடைந்த மற்​றும் பயன்​பாட்​டுக் காலம் நிறைவடைந்த கேபிள்​கள், மின் கடத்​தி​கள் உள்​ளிட்ட உபகரணங்​களை மாற்​று​தல் போன்ற பணி​கள் ரூ.1,762 கோடி​யில் மேற்​கொள்​ளப்​படும்.

மேலும், தமிழகத்​தில் செமி கண்​டக்​டர் துறை​யில் அதி​களவு முதலீட்டை ஈர்க்​க​வும், இத்​துறை​யில் நமது மாநிலத்​தின் பங்கை கணிச​மான அளவு உயர்த்​த​வும், காஞ்​சிபுரம், மதுரமங்​கலத்​தில் செமி கண்​டக்​டர் மற்​றும் எலெக்ட்​ரானிக்ஸ் உற்​பத்தி பூங்கா ரூ.175 கோடி​யில் சிப்​காட் நிறு​வனம் மூலம் அமைக்​கப்​படும்.

இதில் செமி கண்​டக்​டர் துறை​யில் புதிய தொழிற்​சாலைகள் அமைப்​ப​தற்கு ஏது​வாக உலகத்​தரம் வாய்ந்த ஆய்வு வசதி​கள் ஏற்​படுத்​தப்​படும். இதன் மூலம் இத்​துறை​யில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வரை முதலீடு​கள் ஈர்க்​கப்​படும். மேலும், 5,000 நபர்​களுக்குநேரடி மற்​றும் மறை​முக வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும்.

இதுத​விர டிஜிட்​டல் நிதிச் சேவை​களை உரு​வாக்​கும் நோக்​கத்​தில், தமிழ்​நாடு தொழில் வளர்ச்சி நிறு​வனம் (டிட்​கோ) மூலம் கோயம்​புத்​தூரில் டிஜிட்​டல் நிதி மையம் பொது மற்​றும் தனி​யார் பங்​களிப்​புடன் ரூ.400 கோடி​யில் ஏற்​படுத்​தப்​படும். இதன்​மூலம், கோயம்​புத்​தூரில் நிதி மற்​றும் நிதிநுட்​பத்துறை​யில் உலகளா​விய முதலீடு​களை ஈர்க்​க​வும், நவீன தொழில்​நுட்​பங்​களை ஊக்​குவிக்​க​வும், உயர்தர வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​க​வும் வழி​வகை செய்​யப்​படும்.

தமிழகத்​தின் மத்​தி​யப் பகு​தி​யில் அமைந்​துள்ள திருச்சி மற்​றும் அதன் அரு​கில் அமைந்​துள்ள மாவட்​டப் பகு​தி​களில் முக்​கிய உற்​பத்​தித் தொழிற்​சாலைகள் மற்​றும் குறு, சிறு மற்​றும் நடுத்​தரத் தொழில் நிறு​வனங்​கள் அதி​கள​வில் உள்​ளன. எனவே, தமிழ்​நாடு தொழில் வளர்ச்சி நிறு​வனம் (டிட்​கோ) மூலம் ஆய்வு மேற்​கொண்​டு, திட்ட அறிக்கை தயார் செய்து அதன் அடிப்​படை​யில் திருச்சி மண்​டலத்​தில் பல்​முனை சரக்​கு போக்​கு​வரத்​து மையம்​ அமைக்​கப்​படும்​. இவ்​வாறு முதல்​வர்​ விஜய்​ அறி​விப்​புகளை வெளியிட்​டார்​.

தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம்; காஞ்சியில் செமிகண்டக்டர் ஆலை - முதல்வர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள் என்ன?
விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என்றால் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும்: மேலிட பார்வையாளர் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in