

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிலாவிடுதியைச் சேர்ந்தவர் கராத்தே முருகன் என்ற முருகன் செல்வன். இவர், மும்பையில் வசிக்கிறார்.
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசியத் தலைவராக இருந்த எஸ்.ஜே.ஆர். குமார் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அதன் சிறப்பு தேசிய செயற்குழு கூட்டம் கேரள மாநிலம் கொச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், சிறப்பு செயல் தலைவராக பணியாற்றிய முருகன் செல்வன், தேசியத்தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.