மாணவர் திறன் வளர்ச்சிக்கான அம்சங்கள் தேசிய கல்விக் கொள்கையில் உள்ளன: ஆளுநர் கருத்து

மாணவர் திறன் வளர்ச்சிக்கான அம்சங்கள் தேசிய கல்விக் கொள்கையில் உள்ளன: ஆளுநர் கருத்து
Updated on
1 min read

கோவை: தேசிய கல்விக் கொள்​கை​யில் மாணவர்​களின் திறன் வளர்ச்​சிக்​கான பல்​வேறு அம்​சங்​கள் உள்ளன என கோவை​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்​வில், ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர் பேசி​னார்.

கோவை​யில் நேற்று நடை​பெற்ற தனி​யார் கல்​லூரி நிகழ்​வில் கலந்து கொண்டு அவர் பேசி​ய​தாவது: ஆசிரியர்​களுக்கு பயிற்சி அளிப்​பதை மாநில அளவில் மட்​டுமின்​றி, தேசிய அளவில் உள்ள கல்​லூரி​கள் அனைத்​தும் கடைபிடிக்க வேண்​டும்.

ஆசிரியர்​களுக்கு பயிற்சி கொடுப்​ப​தன் மூலம் மாணவர்​களுக்​கும் சிறந்த கல்​வியை கொடுக்க முடி​யும். தேசிய கல்விக் கொள்கை 2020-ல், மாணவர்​களின் திறன் வளர்ச்​சிக்​கான பல்​வேறு அம்​சங்​கள் உள்​ளன. 1947-ம் ஆண்​டி

லேயே காலனி முறையி​லான கல்வி முறையை மாற்றி அமைக்க குழு அமைத்து நமக்​கான கல்வி முறையை உரு​வாக்கி இருக்க வேண்​டும். ஆனால் அதை 2020-ம் ஆண்​டில் தான் செய்ய முடிந்​தது.

முந்​தைய கல்​வித் திட்​டம் வெறும் மனப்​பாடம் செய்​யும் முறையை அடிப்​படை​யாகக் கொண்​டு, வேலை தேடு​பவர்​களை​யும் அடிமை​களை​யும் தான் உரு​வாக்​கியது. நமது தேசத்​தின் பாரம்​பரியமிக்க கல்வி முறை​யில் பல சிறப்​பம்​சங்​கள் உள்​ளன.

அதை பிற நாடு​கள் கூட கடைபிடித்​துள்​ளன. குறிப்​பாக தேசிய கல்விக் கொள்​கை​யில் ஆராய்ச்​சிக்கு அதிக முக்​கி​யத்​து​வம் வழங்​கப்​படு​கிறது. இது இன்​றைய கால​கட்​டத்​தில் மிக​வும் அவசி​ய​மான​தாகும்.

நமது தேசத்​தின் பாரம்​பரியமிக்க கல்வி முறை​யும், நவீன டிஜிட்​டல் தொழில்​நுட்​ப​மும் இணைந்து மாணவர்​களுக்கு கற்​றுத் தரப்பட வேண்​டும். அதுவே சிறந்த எதிர்​காலத்தை உரு​வாக்​கும். வெறும் வேலை வாய்ப்பை பெறு​வது மட்​டுமே கல்​வி​யின் அடிப்​படை​யாக இருக்​கக் கூடாது. வேலை கொடுப்​பவர்​களாக​வும் இளம் தலை​முறை​யினர்மாறவேண்​டும்.

புதிய கல்​வித் திட்​டத்​தில் இதற்​கான இன்​குபேஷன் சென்​டர்​கள் மற்​றும் தொழில் முனை​வோருக்​கான மையங்​கள் அமைத்து பயிற்​சிகள் வழங்​கப்​படும். இதன் மூலம் இளைஞர்​கள் புதிய ஸ்டார்ட் அப் நிறு​வனங்​களை உரு​வாக்​கி, பிறருக்கு வேலை கொடுப்​பவர்​களாக உரு​வாக முடி​யும். வித்​தி​யாச​மான சிந்​தனை​களோடு ஆராய்ச்​சிகளை மேற்​கொண்டு நம் சமூகத்​தின் வளர்ச்​சிக்​கும் நாட்​டின் வளர்ச்​சிக்​கும் உறு​துணை​யாக மாணவர்​கள்​ இருக்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

மாணவர் திறன் வளர்ச்சிக்கான அம்சங்கள் தேசிய கல்விக் கொள்கையில் உள்ளன: ஆளுநர் கருத்து
தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா? - டி.ஆர்.பாலு, திருச்சி சிவா விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in