தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா? - டி.ஆர்.பாலு, திருச்சி சிவா விளக்கம்

தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா? - டி.ஆர்.பாலு, திருச்சி சிவா விளக்கம்
Updated on
2 min read

சென்னை: நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் சுமுக​மாக நடை​பெறு​வதை உறு​தி​செய்​யும் வகை​யில், மத்​திய அரசின் ஏற்​பாட்​டில் அனைத்​துக் கட்​சிக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

பிறகு செய்​தி​யாளர்​களிடம் பேசிய புரட்சிகர சோஷலிசக் கட்​சி​யின் மக்​களவை எம்பி என்​.கே.பிரேமசந்​திரன், `துர​திர்​ஷ்ட​வச​மாக, தொகுதி மறு​வரை

யறை மசோ​தாவுக்கு திமுக ஆதரவு அளித்​துள்​ளது' எனத் தெரி​வித்​தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்​பட்​டது. இதையடுத்​து, திமுக நாடாளு​மன்​றக் குழுத் தலை​வர் டி.ஆர்​.​பாலு மற்​றும் மாநிலங்​களவை குழுத் தலை​வர் திருச்சி சிவா ஆகியோர் செய்​தி​யாளர்​களை சந்​தித்​தனர்.

அப்​போது டி.ஆர்​.​பாலு கூறிய​தாவது: நாடாளு​மன்​றத் தொகு​தி​களை மறு​வரையறை செய்​வது எந்த அடிப்​படை​யில் அமையப் போகிறது என்​பது குறித்த அதி​காரப்​பூர்​வ​மான எந்​தவொரு தகவலை​யும் மத்​திய அரசு இது​வரை எதிர்க்​கட்​சிகளுக்கு வழங்​க​வில்​லை. தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 25 முதல் 50 சதவீதம் வரை உயர்த்த அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக ஊடகங்​களில் வெளி​யாகும் செய்​தி​கள் யாவும் அனு​மானங்​களின் அடிப்​படையி​லானவை; அதி​காரப்​பூர்​வ​மானவை அல்ல.

அரசு சொல்​லாதவரை​யில் நாங்​கள் முடிவு எடுக்க முடி​யாது. அதே​நேரத்​தில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் ஆணைக்கு இணங்க மேகே​தாட்டு அணை விவ​காரம் குறித்து நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் திமுக உறுப்​பினர்​கள் குரல் எழுப்​பு​வார்​கள்.

இதற்​கான நாடாளு​மன்ற ஒத்​திவைப்​புத் தீர்​மான நோட்​டீஸ் முறைப்​படி வழங்​கப்​பட்​டு​விட்​டது. அவை​யில் இதுகுறித்து பேசுவதற்கு அனு​மதி கோரு​வோம். அவைத் தலை​வர்​கள் அனு​மதி மறுத்​தா​லும், தொடர்ந்து வற்​புறுத்தி இப்​பிரச்​சினையை எழுப்​புவோம்.

காவிரி நடு​வர் மன்ற இறு​தித் தீர்ப்பு வந்த பின்​பும் கூட, தமிழகத்​துக்​குத் தண்​ணீர் திறந்​து​விடு​வதற்கு ஒவ்​வொரு முறை​யும் கர்​நாடக அரசின் அனு​ம​தியை எதிர்​பார்க்க வேண்​டிய நிலை நீடிக்​கிறது. காவிரி மேலாண்​மைக் குழு கூடி முடி​வெடுத்​தா​லும் கர்​நாடகம் சரிவரத் தண்​ணீர் திறப்​ப​தில்​லை.

எனவே கர்​நாடக அரசு மேகே​தாட்​டு​வில் அணை கட்​டு​வதைத் தடுக்க தனி​யாக ஒரு நடு​வர் மன்​றம் அமைக்க வேண்​டும் என்​பது குறித்​தும் நாடாளு​மன்​றத்​தில் வலி​யுறுத்​திப் பேசுவோம். உடனடி​யாக பெண்​கள் இட ஒதுக்​கீடு மசோதா கொண்​டுவர வேண்​டும் என தெரி​வித்​திருக்​கிறோம்.

நாடாளு​மன்​றத்​தின் மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை​யில் திமுக உறுப்​பினர்​கள் மற்​றும் காங்​கிரஸ் உறுப்​பினர்​கள் தனித்​தனி​யாக அமரு​வதற்​கான அதி​காரப்​பூர்வ இருக்கை ஒதுக்​கீட்டு விவரங்​கள் நேற்று (நேற்று முன்​தினம்) அதி​காலை​தான் வந்து சேர்ந்​தன. இதற்​கான கோரிக்​கையை ஒரு மாதத்​துக்கு முன்பே நாங்​கள் சமர்ப்​பித்​திருந்​தோம்.

மாநில சுயாட்​சி, தென் மாநிலங்​களின் நாடாளு​மன்​றப் பிர​தி​நி​தித்​துவ உரிமை, காவிரி விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரம் மற்​றும் கல்வி உரிமை ஆகிய எதி​லுமே திமுக ஒரு​போதும் சமரசம் செய்​து​கொள்​ளாது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். பிறகு திருச்சி சிவா பேசுகை​யில், ``தொகுதி மறு​வரையறை தொடர்​பாக தவறான தகவல் பரவி​யுள்​ளது.

தென் மாநிலங்​களின் நாடாளு​மன்​றப் பிர​தி​நி​தித்​து​வம் பாதிக்​கப்​படும் வகை​யில் எந்த வடிவத்​தில் இந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதா கொண்​டு​வரப்​பட்​டாலும், அதை திமுக எதிர்க்​கும்.

மக்​கள் தொகையை அடிப்​படையாகக் கொண்டு வட மாநிலங்​களின் தொகு​தி​கள் அதி​கரிக்​கப்​பட்​டால், குடியரசுத் தலை​வர், குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல்​களிலோ அல்​லது நாடாளு​மன்​றத்​தில் முக்​கிய மசோ​தாக்​கள் மீதான வாக்​கெடுப்​பின் போதோ தென் மாநிலங்​களின் குரலுக்​கான மரி​யாதை​யும் முக்​கி​யத்​து​வ​மும் இல்​லாமல் போய்​விடும்.

தற்​போது இருக்​கும் 543 நாடாளு​மன்​றத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை மாற்​றாமல், அதே எண்​ணிக்​கைக்​குள் பெண்​களுக்​கான இட ஒதுக்​கீடு மசோ​தாவை கொண்டு வந்​தால் அதை திமுக ஆதரிக்​கும். ஆனால் இன்​றைய அனைத்​துக் கட்சி கூட்​டத்​தில் இந்த மசோதா குறித்து அரசுத் தரப்​பில் ஒரு வார்த்தை கூட பேசப்​பட​வில்​லை; எந்​த​விதக்​ குறிப்​பு​களும்​ எதிர்க்​கட்சிகளுக்​குத்​ தரப்​படவில்​லை'' என்​றார்​.

தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா? - டி.ஆர்.பாலு, திருச்சி சிவா விளக்கம்
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in