விருதுநகர் அருகே நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டறிந்த கல்வெட்டு

மல்லாங்கிணறு சென்னகேசவப் பெருமாள் கோயிலில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டு.

மல்லாங்கிணறு சென்னகேசவப் பெருமாள் கோயிலில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டு.

Updated on
1 min read

விருதுநகர்: மல்​லாங்​கிணறில் உள்ள பெரு​மாள் கோயில் கரு​வறை பகு​தி​யில் இருந்த தமிழ் கல்​வெட்டை நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு கண்​டறிந்​தார்.

விருதுநகர் அருகே உள்ள மல்​லாங்​கிணறில் அமைச்சர் தங்​கம் தென்​னரசு வீட்​டின் எதிரே சென்​னகேசவப் பெரு​மாள் கோயில் உள்​ளது. கடந்த 13-ம் தேதி இக்​கோயி​லில் கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது. முன்​ன​தாக திருப்​பணி​கள் நடை​பெற்​ற​போது, பாலால​யம் செய்து பெரு​மாளை கரு​வறை​யில் இருந்து வெளியே வைத்​திருந்​தனர்.

அப்​போது, அமைச்​சர் தங்​கம் தென்​னரசு, கோயி​லின் உட்​புறத்​தில் கரு​வறை அர்த்த மண்​டபப் பகு​தியை பார்​வை​யிட்​டார். அங்​கிருந்த சுவர்​களில் தமிழ் கல்​வெட்​டுத் துண்​டு​கள் இருப்​பதை கண்​டறிந்​தார்.

உடனடி​யாக பாண்​டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்​தின் செய​லா​ளர் சாந்​தலிங்​கத்தை தொடர்​பு​கொண்​டு, அக்​கல்​வெட்டை படி​யெடுத்து படிக்க வேண்​டும் என்று கேட்​டுக்​கொண்​டார்.

அதன்​படி, ஆய்வு மையத்​தின் ஆய்​வாளர்​கள் உதயகு​மார் மற்​றும் முத்​துப்​பாண்டி ஆகியோர் பெரு​மாள் கோயிலுக்​குச் சென்​று, 5 கல்​வெட்​டு​களைப் படி​யெடுத்து அமைச்​சரிடம் காண்​பித்​தனர்.

அவற்​றில் ஒரு கல்​வெட்டு முழு​மை​யான கல்​வெட்​டாக இருந்​தது. அதில், குலசேகரப் பாண்​டியனின் 4-வது ஆட்சி ஆண்​டில் கற்குறிச்சி ஈஸ்​வரன் எனும் சிவன் கோயிலில் அர்த்த மண்​டபத்​தில் நிலை கால் எடுத்த செய்தி இடம் பெற்​றிருந்​தது. இக்​கல்​வெட்​டோடு மேலும் 4 துண்டு கல்​வெட்​டு​களும் படித்​தறியப்​பட்​டன. இவை அனைத்தும் கி.பி. 13-ம் நூற்​றாண்​டைச் சேர்ந்​தவை.

இதன் மூலம் கி.பி. 13-ம் நூற்​றாண்​டில் பாண்​டியர் காலத்​தில் கல்​குறிச்சி எனும் ஊரில் ஒரு சிவன் கோயில் இருந்​ததும், அது இடிந்​து​விட்​ட​தால் அங்​கிருந்த கற்​களைக் கொண்​டு​வந்து மல்​லாங்​கிணறு பெரு​மாள் கோயில் கட்​டப்​பட்​டது என்​பதும் தெரிய வந்​துள்​ளது.

மல்​லாங்​கிணறுக்​குக் கிழக்​காக 5 கி.மீ. தூரத்​தில் கல்​குறிச்சி உள்​ளது. ஏற்​கெனவே, இந்த ஊரில் கி.பி. 13-ம் நூற்​றாண்​டைச் சேர்ந்த முத்​தரையர் தலை​வனின் பாடல் கல்​வெட்டு கண்​டறியப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

தற்​போது கண்​டறியப்​பட்​டுள்ள கல்​வெட்​டில் உள்ள செய்​தி​களின் மூலம் மல்​லாங்​கிணறு சென்​னகேசவப் பெரு​மாள் கோயில், 300 ஆண்​டு​களுக்கு முன்பு கட்​டப்பட்ட கோயில் என்​பதும் தெரிய​வந்​துள்​ளது.

<div class="paragraphs"><p>மல்லாங்கிணறு சென்னகேசவப் பெருமாள் கோயிலில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டு.</p></div>
நீதிபதி குறித்து அவதூறு: வழக்கறிஞர் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in