ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக ஆக.6 முதல் 15 வரை இந்​திய கம்யூ. சார்பில் நாடு முழுவதும் பாதயாத்திரை

இந்திய கம்யூ. தேசிய செயலர் டி.ராஜா தகவல்
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக ஆக.6 முதல் 15 வரை இந்​திய கம்யூ. சார்பில் நாடு முழுவதும் பாதயாத்திரை
Updated on
1 min read

திருவாரூர்: ஒரே​ நாடு ஒரே தேர்​தலுக்​கு எதி​ராக இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15 வரை நாடு முழு​வதும் பாதயாத்​திரை நடை​பெற உள்ளதாக அக்​கட்​சி​யின் தேசிய செய​லா​ளர் டி.​ராஜா தெரி​வித்​தார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில நிர்​வாகக்​குழு கூட்​டம் திரு​வாரூரில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற அக்​கட்​சி​யின் தேசிய செய​லா​ளர் டி.​ராஜா செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: மத்​திய அரசு, இப்​போது ஒரே​ நாடு, ஒரே தேர்​தல் என்று மீண்​டும் பேச தொடங்​கி​யிருக்​கிறது.

அதனுடைய பொருள் இந்​தி​யாவில் ஒற்​றைக் கட்​சி​யின் ஆட்சி முறையை கொண்டு வரு​வதற்​கும், இந்​தி​யாவை ஜனநாயக பாதை​யில் இருந்து சர்​வா​தி​கார பாதைக்கு இட்​டுச் செல்​வதற்​கு​மான முயற்​சி​யாகும். இதை இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி வன்​மை​யாகக் கண்​டிக்​கிறது.

எனவே, இந்தத் திட்​டத்தை கண்​டித்து இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நாடு முழு​வதும் பாத​யாத்​திரை நடத்திபொது​மக்​களை சந்​திக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த பாத​யாத்​திரை​யின்​போது, மக்​களு​டைய வாழ்​வா​தாரப் பிரச்​சினை​கள் முன்​வைக்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக ஆக.6 முதல் 15 வரை இந்​திய கம்யூ. சார்பில் நாடு முழுவதும் பாதயாத்திரை
நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in