கல்வி தரம், பேராசிரியர்களின் திறன் குறித்து மாணவர்கள் ஆன்லைனில் கருத்து தெரிவிக்கலாம்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

கல்வி தரம், பேராசிரியர்களின் திறன் குறித்து மாணவர்கள் ஆன்லைனில் கருத்து தெரிவிக்கலாம்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: ​நாடு முழு​வதும் உள்ள மருத்​து​வக் கல்​லூரி​களில் கல்​வி​யின் தரம், பேராசிரியர்​களின் திறமை குறித்து அங்கு படிக்​கும் மாணவர்​கள், ஆன்​லைனில் கருத்து தெரிவிக்​கலாம் என்று தேசிய மருத்​துவ ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக, தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் (என்​எம்​சி) செயலர் மருத்​து​வர் ராகவ் லங்​கர் வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்பு: தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் கட்​டுப்​பாட்​டின் கீழ், நாடு முழு​வதும் இயங்​கும் மருத்​து​வக் கல்வி நிறு​வனங்​கள் குறித்து இணை​யதளம் மூலம் கருத்​தறி​யும் நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறோம்.

இளநிலை மருத்​துவ மாணவர்கள் அனை​வரும் ஆணை​யத்​தின் இணை​யதளத்​தில் தங்​களின் கருத்​துகள், தகவல்​களைப் பதிவு செய்​ய​லாம். கல்​வித் தரம், பேராசிரியர்​களின் எண்​ணிக்​கை, அவர்​களது பயிற்​று​விக்​கும் திறன், செயல்​முறை விளக்​கங்​கள், ஆய்வக வசதி​கள், மருத்​து​வ​மனை கட்​டமைப்பு என பல்​வேறு விஷ​யங்​கள் குறித்து கருத்து தெரிவிக்​கலாம்.

அவை அனைத்​தும் ரகசி​ய​மாக பாது​காக்​கப்​பட்​டு, மருத்​து​வக் கல்​லூரி​களை மதிப்​பீடு செய்​யும் ​போது கவனத்​தில் எடுத்​துக் ​கொள்​ளப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

கல்வி தரம், பேராசிரியர்களின் திறன் குறித்து மாணவர்கள் ஆன்லைனில் கருத்து தெரிவிக்கலாம்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு
எண்ணூர் நிலக்கரி கிடங்கில் தீ விபத்து: 5 சதவீத நிலக்கரி சேதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in