“காங்கிரஸ் மீது திமுக பழி சுமத்துவதா?” - நாராயணசாமி கண்டனம்

நாராயணசாமி

நாராயணசாமி

Updated on
1 min read

பழநி: தமிழக மக்​கள் மாற்​றத்தை விரும்​பி​யிருக்​கிறார்​கள். ஆனால், திமுக எங்​கள் மீது பழி போடு​கிறது என்று புதுச்​சேரி முன்​னாள் முதல்​வர் நாராயண​சாமி தெரி​வித்​தார்.

திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி​யில் உள்ள தண்​டா​யுத​பாணி சுவாமி கோயிலுக்கு வந்த நாராயண​சாமி, விஸ்​வரூப தரிசனத்​தில் கலந்​து​கொண்டு தரிசனம் செய்​தார். பின்​னர், அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: முன்​னாள் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் இண்​டியா கூட்​டணி தமிழகத்​தில் ஆட்சி அமைத்த 5 ஆண்​டு​கள் வளர்ச்​சித் திட்​டங்​களைக் கொடுத்​தது. அதை யாரும் மறுக்க முடி​யாது.

ஆனால், தமிழக மக்​கள் மாற்​றத்தை விரும்​பி​யிருக்​கிறார்​கள். எனவே, முதல்​வர் விஜய் தலை​மை​யில் தவெக ஆட்​சிக்கு வந்​திருக்​கிறது. ஆனால், காங்​கிரஸ் கட்சி எங்​களை முதுகில் குத்​தி​விட்​டது, எங்​களுக்கு துரோகம் செய்​து​விட்​டது என்று காங்​கிரஸ் கட்சி மீதும் அதன் தலை​வர்​கள் மீதும் திமுக​வினர் பழி சுமத்​துகிறார்​கள்.

முன்​னாள் முதல்​வர் கருணாநிதி ஆட்சி அமைப்​ப​தற்கு காங்​கிரஸ் கட்சி திமுவுக்கு பெரும்​பான்மை இல்​லாத சமயத்​தில் வெளி​யில் இருந்து ஆதரவு கொடுத்​தது. அதனால், 5 ஆண்​டு​கள் அவர் ஆட்சி நடத்​தி​னார் என்​பதை திமுக மறந்​து​விட்​டது.

மேலும், 2014 மக்​கள​வைத் தேர்​தலில் காங்​கிரஸ் கட்​சியை ஒதுக்​கி​விட்டு திமுக தனி​யாகத் தேர்​தலைச் சந்​தித்​ததை​யும் அவர்​கள் மறந்​து​விட முடி​யாது. கூட்​ட​ணி​யில் மாற்​றங்​கள் வரும். பல கட்​சிகள் இணை​யும், பல கட்சிகள் பிரிந்து போகும். அதற்​காக எங்​களை திமுக மற்​றும் அதன் தலை​வர்​கள் விமர்​சனம் செய்​வதை ஏற்​க முடி​யாது.

அது​மட்​டுமல்ல, திமுக, காங்​கிரஸ் கட்​சி​யில் ஏற்​பட்ட குழப்​பம் காரண​மாக, நாங்​கள் புதுச்​சேரி​யில் துர​திருஷ்ட​வச​மாக ஆட்​சியை இழந்​தோம். மாநில அளவி​லான கூட்​டணி வேறு, அகில இந்​திய அளவி​லான கூட்​டணி வேறு. இண்​டியா கூட்​டணி பலமாக இருந்​தால்​தான் இந்த மதவாத, பிரி​வினை​வாத மோடி அரசை நாம் வீழ்த்த முடி​யும். இதை திமுக கருத்​தில் கொள்​ள வேண்​டும். அவர்​கள் தனி​யாக நின்று போராடி​னால் வெற்றி பெற​முடி​யாது.

விஜய் தற்​போது​தான் ஆட்​சிக்கு வந்​துள்​ளார். அதனால் பொறுத்​திருந்து பார்க்​கலாம். பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை தனிக்​கட்சி தொடங்​கு​வது அவரது தனிப்​பட்ட விருப்​பம், அவர் பல காரணங்​களுக்​காக அந்​த முடிவை எடுத்​திருக்​கலாம்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>நாராயணசாமி</p></div>
புதிய அரசியல் இயக்கம்: அண்ணாமலை அறிவிப்பு; 10 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள் பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in