தென்மண்டலக் குழு உறுப்பினர்களாக அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் நியமனம்

தென்மண்டலக் குழு உறுப்பினர்களாக அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் நியமனம்
Updated on
1 min read

சென்னை: தென் மண்​டலக் குழு உறுப்​பினர்​களாக அமைச்​சர்​கள் நிர்​மல்​குமார், ராஜ்மோகன் ஆகியோரை ஆளுநர் நியமனம் செய்​துள்​ளார்.

மத்​திய உள்​துறை அமைச்​சர் தலை​மை​யில் அவ்​வப்​போது நடத்​தப்​படும் தென் மாநில கவுன்​சில் கூட்​டத்​தில் தென் மாநில முதல்​வர்​கள், தலை​மைச் செயலர்​கள், பங்​கேற்​பது வழக்​கம். மாநிலங்​களுக்கு இடையே நில​வும் எல்​லைப் பிரச்​சினை​கள், நதிநீர் பங்​கீடு, உள்​கட்​டமைப்பு மேம்​பாடு, போக்​கு​வரத்து தொடர்​பு போன்ற பொதுவான சிக்​கல்​கள் குறித்து விவா​தித்து சுமுகத் தீர்வு காணப்​படும்.

அந்த வகை​யில், தமிழகத்​தில் புதி​தாக பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசு சார்​பில், தென் மண்டல கவுன்​சில் கூட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​கான உறுப்​பினர்​களை ஆளுநர் நியமனம் செய்​துள்​ளார். முதல்​வர் விஜய் தலை​மையி​லான இந்த குழு​வில், அமைச்​சர்​கள் சி.டி.நிர்​மல்​குமார், ராஜ்மோகன் ஆகியோர் உறுப்​பினர்​களாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

மாநில அரசு நிர்​வாகத்​தின் சார்​பில் தலை​மைச் செயலர் சாய்​கு​மார் மற்​றும் உள்​துறைச் செயலர் மணி​வாசன் ஆகியோ​ரும் இடம்​பெற்​றுள்​ளனர். இதுதொடர்​பான ஆணை அரசிதழில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. தென் மாநில முதல்​வர்​களுக்​கான கவுன்​சில் கூட்​டம் விரை​வில் நடை​பெற உள்​ளது. இதில் காவிரி நதிநீர் பிரச்​சினை உள்​ளிட்ட தமிழகத்​தின் முக்​கிய வாழ்​வா​தா​ரக் கோரிக்​கைகளை அரசு முன்​வைக்​கும் என்​று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தென்மண்டலக் குழு உறுப்பினர்களாக அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் நியமனம்
குற்றவாளிகளுக்கு அதிக தண்டனை விதிக்க வகைசெய்யும் வினாத்தாள் கசிவு மசோதா இன்று தாக்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in