‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்ட அமைச்சர்கள்

தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்
புதுக்கோட்டையில் திரையரங்கு ஒன்றில் ஜனநாயகன் படம் பார்த்தபோது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ்.

புதுக்கோட்டையில் திரையரங்கு ஒன்றில் ஜனநாயகன் படம் பார்த்தபோது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ்.

Updated on
1 min read

புதுக்கோட்டை/கோவை/புதுவை: ​முதல்​வர் விஜய் நடித்​துள்ள ஜனநாயகன் திரைப்​படம் உலகம் முழு​வதும் நேற்று வெளியானது. தமிழகம் முழு​வதும் 1000 திரையரங்​கு​களில் திரை​யிடப்​பட்ட நிலை​யில் ரசிகர்​கள் மிகுந்த கொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். நகரப்​பகுதி மட்​டுமில்​லாமல் கிராமப்​புறங்​களி​லும் அனைத்துதிரையரங்​கு​களி​லும் ஜனநாயகன் படம் வெளியானது.

திரையரங்​கம் முன்பு கட் அவுட்​டுக்கு பால் அபிஷேகம் செய்​தும் மேள​தாளம் முழங்​க​வும் ரசிகர்​கள், தொண்​டர்​கள் நடன​மாடினர். பல்​வேறு இடங்​களில் பட்​டாசு வெடித்​தும் கொண்​டாடினர். இந்​நிலை​யில் ஜனநாயகன் திரைப்​படத்தை பார்த்​த​போது அமைச்​சர்​கள் முகமது பர்​வேஸ், சம்​பத்​கு​மார் மற்​றும் விக்​னேஷ் ஆகியோர் உணர்ச்சிப் பெருக்​கால் கண்​ணீர் விட்டு அழுதனர். இந்தக் காட்சி வேக​மாக பரவி வரு​கிறது.

புதுக்​கோட்​டை​யில் நேற்று ‘ஜன​நாயகன்’ திரைப்​படம் பார்த்த தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் முகமது பர்​வேஸ் நெகிழ்ச்​சி​யில் கண்​ணீர் விட்டார்.புதுக்​கோட்டை மேல​ராஜ வீதியில் உள்ள ஒரு திரையரங்​கில் அமைச்​சர் முகமது பர்​வேஸ் கட்​சி​யினருடன் சென்று திரைப்​படத்தை பார்த்து ரசித்​தார்.

அப்​போது, திரை​யில் விஜய்​யைப் பார்த்​ததும் தன்னை அறி​யாமலேயே நெகிழ்ந்து கண்​ணீர் விட்​டார். இதே​போல, கரூர் திண்​ணப்பா திரையரங்​கில் ஜனநாயகன் படத்தை பார்த்த தவெக மேற்கு மாவட்ட செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன், திரை​யில் விஜய் தோன்​றியதும் அதைப் பார்த்து தேம்​பித் தேம்பி அழு​தார்.

கோவை​யில்​... கோவை நூறடி சாலை​யில் உள்ள கங்கா திரையரங்​கில் பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத்​துறை அமைச்​சர் சம்​பத்​கு​மாரும், போத்​தனூர் சாரதா மில் சாலை​யில் உள்ள அரசன் திரையரங்​கில் மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்​வை​கள் துறை அமைச்​சர் கே.​விக்​னேஷூம் ரசிகர்​களு​டன் அமர்ந்து படம் பார்த்​தனர். படம் முடி​யும் தரு​வா​யில் அமைச்​சர்​கள் சம்​பத்​கு​மார், விக்​னேஷ் ஆகியோர் உணர்ச்சி பெருக்​கால் கண்​ணீர் விட்டு அழுதனர்.

புதுச்​சேரி: புதுச்​சேரி​யில் நேற்று காலை 7 மணிக்கு ஜனநாயகன் வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​பட்ட நிலை​யில் காட்​சிகள் ரத்து செய்​யப்​பட்​டன. பல திரையரங்​கம் முன்பு காலை முதலே ரசிகர்​கள் காத்​திருந்​தனர். நேற்று காலை 10.45 மணி​யள​வில்​தான் முதல் காட்சி தொடங்​கியது. படம் தொடங்​கிய​தும் ‘தமிழக முதல்​வர் விஜய்’ என டைட்​டில் வந்​தவுடன் ரசிகர்கள் கோஷம் எழுப்பியும் விசில் அடித்தும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

<div class="paragraphs"><p>புதுக்கோட்டையில் திரையரங்கு ஒன்றில் ஜனநாயகன் படம் பார்த்தபோது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ்.</p></div>
சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவாக வெற்றிமாறன் முதல் அமீர் வரை பேசியது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in