சென்னையில் மின்சார குளிர்சாதன பிரீமியம் பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

சென்னையில் மின்சார குளிர்சாதன பிரீமியம் பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

சென்னை: அதிநவீன வசதி மற்​றும் தரமான பயண அனுபவத்தை வழங்க குளிர்​சாதன பிரீமியம் பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்​சர் சா.சி.சிவசங்​கர் தொடங்​கி​வைத்​தார்.

மாநகர் போக்​கு​வரத்​துக் கழகம் தற்​போது சாதாரண (விடியல் பயணம்), விரைவு, சொகுசு, குளிர்​சாதன மற்​றும் மின்​சா​ரப் பேருந்து சேவை​கள் மூலம் தின​மும் லட்​சக்​கணக்​கான பயணி​களுக்கு சேவை செய்து வரு​கிறது.

எனினும் சென்னை மாநகரில் பணிபுரி​யும் அலு​வல​கப் பயணி​கள், தினசரி பயணி​கள் சிலர் அதிக வசதி​யுட​னும் விரை​வான பயண சேவையை விரும்​பு​கின்​றனர்.

மேலும் மாநகர் போக்​கு​வரத்​துக் கழக பேருந்து பயணி​களிடையே சேவை​கள் குறித்த ஆய்வு ‘சென்னை ஒன்’ செயலி மூலம் மேற்​கொள்​ளப்​பட்​ட​போது, குறித்த நேரப் பயணம், சொகு​சான மற்​றும் உறுதி செய்​யப்​பட்ட இருக்கை வசதி, கூட்ட நெரிசல் இல்லா பயணம், நம்​பக​மான மற்​றும் பாது​காப்​பான பயணம், மின்​சா​ரப் பேருந்துகள் போன்​றவை குறித்து கருத்​துகள் கேட்​டறியப்​பட்​டன.

இதைக் கருத்​தில் கொண்​டு, தனி​யார் வாக​னப் பயன்​பாட்​டைக் குறைக்​க​வும், தனி​யார் வாக​னங்​களி​லிருந்து பொதுப் போக்​கு​வரத்​துக்கு மாறு​வதை ஊக்​குவிக்​க​வும், நெரிசல் மற்​றும் கார்​பன் உமிழ்​வைக் குறைக்​க​வும், பொதுப் போக்​கு​வரத்​துக் ​கான ஈர்ப்பை அதி​கரிக்​கும் வகை​யிலும், சென்னை மாநகரின் முக்​கிய மற்​றும் அதிக பயணி​கள் பயன்​பாடுள்ள வழித்​தடங்​களில் பிரீமியம் பேருந்து சேவையை மாநகர் போக்​கு​வரத்​துக் கழகம் அறி​முகப்​படுத்த திட்​ட​மிட்​டு, முதற்​கட்​ட​மாக 40 கி.மீ.க்​கும் அதி​க​மான நீளம் கொண்ட கிளாம்​பாக்​கம் முதல் திரு​வான்​மியூர் வரை P91 மற்​றும் கோயம்​பேட்​டில் இருந்து சிறுசேரி ஐடி பூங்கா வரை P570S என இரு வழித்​தடங்​களில் 5 பேருந்துகள் பரீட்​சார்த்த முறை​யில் இயக்​கப்​பட​வுள்​ளது.

இந்த தாழ்தள குளிர்​சாதன மின்​சா​ரப் பேருந்​துகளைக் கொண்ட பிரீமியம் பேருந்து சேவையை நேற்று போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சிவசங்​கர் காணொலிக் காட்சி வாயி​லாக தொடங்கி வைத்​தார். இந்த பிரீமியம் பேருந்து சேவை​யின் குறைந்​த​பட்ச கட்​ட​ணம் ரூ.50 முதல் அதி​கபட்​சம் ரூ.150 வரை நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த புதிய பேருந்​துகளில் 5 நாட்​களுக்கு முன்​ன​தாகவே ஆன்​லைன் மூலம் கட்​ட​ணம் செலுத்தி இருக்​கைகளை முன்​ப​திவு செய்​து​கொள்​ளும் வசதி இருக்​கும். மேலும் சொகு​சான அதிக இட வசதி கொண்ட இருக்​கைகள், ஜிபிஎஸ் தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்தி பேருந்​தின் நிகழ்​நேர பயணத்தை கண்​காணித்​தல், இலவச வைஃபை, மொபைல், லேப்​டாப் சார்​ஜிங், சிசிடிவி மற்​றும் அவசர அழைப்பு வசதி, மாற்​றுத் திற​னாளி பயணி​கள் எளி​தாகப் பயணம் மேற்​கொள்​ளும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த பேருந்​தில் நடத்​துநர் இருக்க மாட்​டார்​கள், நின்று கொண்டு பயணிக்​க​வும் அனு​ம​தி​யில்​லை. இந்​நிகழ்ச்​சி​யில், மாநகர் போக்​கு​வரத்​துக்​கழக மேலாண் இயக்​குநர் பிரபுசங்​கர், இணை மேலாண் இயக்​குநர் ராம. சுந்​தர​பாண்​டியன், பொது மேலா​ளர்​கள், உயர் அலு​வலர்​கள் மற்​றும்​ தொழிற்​சங்​கப்​ பிர​தி​நி​தி​கள்​ கலந்​து கொண்​டனர்​.

சென்னையில் மின்சார குளிர்சாதன பிரீமியம் பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அருகே பிளஸ் 2 மாணவி கொலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in