தூத்துக்குடி அருகே பிளஸ் 2 மாணவி கொலை

தூத்துக்குடி அருகே பிளஸ் 2 மாணவி கொலை
Updated on
1 min read

தூத்​துக்​குடி: தூத்​துக்​குடி அருகே பிளஸ் 2 மாணவி கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தூத்​துக்​குடி மாவட்​டம் வேடநத்​தம் கிராமத்​தைச் சேர்ந்த சுப்​பு​ராஜ் - காளீஸ்​வரி தம்​ப​தி​யரின் மகள் பிர​திபா (17), தற்​போது பிளஸ் 2 தேர்வை எழுதி வந்​தார்.

நேற்று முன்​தினம் மாலை வீட்​டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்​ப​வில்​லை. இதுகுறித்த புகாரை பெறாமல், மாண​வி​யின் பெற்​றோரை குளத்​தூர் காவல் நிலை​யம் மற்​றும் விளாத்​தி​குளம் மகளிர் காவல் நிலைய போலீ​ஸார் அலைக்​கழித்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இதனிடையே, நேற்று மாலை வேடநத்​தம் காட்​டுப்​பகு​தி​யில் காயங்​களு​டன் மாண​வி​யின் உடல் கிடந்​தது. இதையடுத்து சுப்​பு​ராஜ் மற்​றும் ஊர் பொது​மக்​கள் ராமேசுவரம் சாலை​யில் வேடநத்​தம் பேருந்து நிறுத்​தம் அருகே போலீ​ஸாரைக் கண்​டித்து மறியலில் ஈடு​பட்​டனர்.

எம்​எல்ஏ மார்க்​கண்​டேயன், எஸ்​.பி. மதன் ஆகியோர் பேச்​சு​ நடத்​தினர். ஆனாலும், இரவு 9 மணியை கடந்​தும் போராட்​டம் நீடித்​தது.

தூத்துக்குடி அருகே பிளஸ் 2 மாணவி கொலை
திருமானூரில் தங்கியிருந்த 13 வங்கதேசத்தவர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in