

அமைச்சர் ரமேஷ்
திருச்சி: பழநி கோயில் நிலம் விவகாரத்தில் அப்படி ஒரு நிலம் இருப்பதே எனக்கு இந்த பிரச்சினை வந்த பின்பு தான் தெரியும் என அமைச்சர் எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பழநி கோயில் நிலம் விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அரசியல் நோக்கத்துக்காக சிலர் என் மீது பழி போடுகிறார்கள்.
இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று நான் தான் முதல்வரிடம் தெரிவித்தேன். அங்கே அப்படி ஒரு நிலம் இருப்பதே எனக்கு இந்த பிரச்சினை வந்த பின்பு தான் தெரியும்.
நீட் விவகாரத்தில் மாணவர்களின் போராட்டத்துக்கு நியாயமான ஆதரவை தருகிறோம் என்று ஏற்கெனவே முதல்வர் தனது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டார்.
நீட் தேர்வு முற்றிலும் அகற்றப்பட வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதே நிரந்தர தீர்வு என்றும் ஏற்கெனவே முதல்வர் தெளிவாக தெரிவித்துவிட்டார். அதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு கூறினார்.