வடமாநில தொழிலாளர்கள் நலன்காக்க உரிய நடவடிக்கை: அமைச்சர் பர்வேஸ் திட்டவட்டம்

வடமாநில தொழிலாளர்கள் நலன்காக்க உரிய நடவடிக்கை: அமைச்சர் பர்வேஸ் திட்டவட்டம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் வடமாநிலத் தொழிலா​ளர்​களின் பாது​காப்பை உறு​தி​செய்ய தேவை​யான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்றன என்று அமைச்​சர் முகமது பர்​வேஸ் தெரி​வித்தார். அரசு ஐடிஐகளில் பணி​யாற்​றும் 136 இளநிலை பயிற்சி அலு​வலர்​களுக்​கு, உதவி பயிற்சி அலு​வலர்​களாக பதவி உயர்வு வழங்​கப்​பட்​டுள்​ளன.

இவர்​களுக்கு பதவி உயர்வு ஆணை​களை தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் ஜா.​முகமது பர்​வேஸ் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று வழங்​கி​னார். இந்​நிகழ்​வின்​போது, தொழிலா​ளர் நலத்​துறை செயலர் கொ.வீர​ராகவ ராவ், வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை இயக்​குநர் சி.பழனி மற்​றும் துறை சார்ந்த அலு​வலர்​கள் உடனிருந்​தனர்.

அதன்​பின் அமைச்​சர் பர்​வேஸ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இத்​துறை​யில் இது​வரை இல்​லாத வகை​யில் 136 பயிற்​றுநர்​களுக்கு பணிமூப்பு அடிப்​படை​யில் முதல்​முறை​யாக கணினிவழி கலந்​தாய்வு மூல​மாக வெளிப்​படைத்​தன்​மை​யுடன் பதவி உயர்வு வழங்​கப்​பட்​டுள்​ளது

தமிழகத்​தில் எந்​தத் தொழிற்​சாலை​யாக இருந்​தா​லும், தொழிலா​ளர்​களின் பாது​காப்​பில் சமரசம் என்ற பேச்​சுக்கே இடமில்​லை. அமோனியா கசிவு தொடர்​பாக 21 சிறப்​புக் குழுக்​கள் அமைக்​கப்​பட்டு ஆய்​வு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இதில் விதி​களை மீறிய 28 ஆலைகளுக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

எந்​தவொரு தொழிற்​சாலை​யிலும் குழந்​தைத் தொழிலா​ளர்​களைப் பணி​யமர்த்த அனு​மதி இல்​லை. இதை கண்​காணிக்​கத் தொடர்ந்து ஆய்​வு​கள் நடத்​தப்​படு​கின்​றன. அந்த வகை​யில் ஆண்​டு​தோறும் நடத்​தப்​படும் ஆய்​வு​களில் சுமார் 70 குழந்​தைத் தொழிலா​ளர்​களும், 150 கொத்​தடிமை​களும் இது​வரை மீட்​கப்​பட்​டுள்​ளனர்.

தமிழகத்​தில் 50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வெளி​மாநிலத் தொழிலா​ளர்​கள் பணிபுரி​கின்​றனர். அவர்​களின் விவரங்​களைச் சேகரிக்க பிரத்​யேக வலை​தளம் உரு​வாக்​கப்​பட்​டு, இது​வரை 13.4 லட்​சம் தொழிலா​ளர்​களின் விவரங்​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.

தொழிற்​சாலைகள் மற்​றும் நிறு​வனங்​களை அணுகி மீத​முள்​ளவர்​களை​யும் பதிவுசெய்ய அறி​வுறுத்தி வரு​கிறோம். வட மாநிலத் தொழிலா​ளர்​களின் பாது​காப்பை உறு​தி​செய்ய அந்​தந்த மாவட்ட நிர்​வாகங்​கள் மூல​மாகத் தொடர்ந்து ஆய்​வு​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. அவர்​களுக்கு நியாய​மான ஊதி​யம் கிடைப்​ப​தை​யும் உறு​தி​செய்ய நடவடிக்கை எடுக்​கப்​படும்​ என்று அமைச்சர் கூறி​னார்​.

வடமாநில தொழிலாளர்கள் நலன்காக்க உரிய நடவடிக்கை: அமைச்சர் பர்வேஸ் திட்டவட்டம்
தொழில்நுட்பக் கோளாறால் பூங்கா நிலையத்தில் பழுதாகி நின்றது ரயில்: தாம்பரம்-கடற்கரை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in