அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சித்த பல்கலை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராதது ஏமாற்றம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published on

சென்னை: “சித்த பல்கலைக்கழகம் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராதது ஏமாற்றம் அளிக்கிறது” என்று தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சித்த மருத்துவத்துக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு 25 ஏக்கர் நிலம் மாதவரம் பால்பண்ணை பகுதியில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ.2 கோடியில் அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழக அரசு அனுப்பிய சித்த பல்கலைக்கழகம் மசோதாவை இருப்பிலேயே வைத்திருந்துவிட்டு தற்போது குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி இருப்பதாக தெரிகிறது. ஆளுநரின் ஒப்புதல் என்பது இரண்டாவது முறையாக ஏமாற்றம் அளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய சித்த மருத்துவத்தை ஏன் ஆளுநர் வெறுக்கிறார் என்று தெரியவில்லை. இது உண்மையிலேயே ஒட்டுமொத்த தமிழர்கள் வருத்தப்படுகின்ற மிகப் பெரிய நிகழ்வாகும்” என்றார்.

பின்னணி என்ன?: தமிழகத்​தில் சித்த மருத்​துவ பல்​கலைக்​கழகத்தை உரு​வாக்​கு​வதற்​கான மசோ​தா, கடந்த 2022-ம் ஆண்டு சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்​டது. இந்த மசோ​தா​வில் பல்​கலைக்​கழகத்​தின் வேந்​த​ராக முதல்​வர் செயல்​படு​வார் என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. இந்த பல்​கலைக்​கழகம் அமைப்​ப​தற்​காக தமிழக அரசு 20 ஏக்​கர் நிலத்​தை​யும் மாதவரம் அரு​கில் ஒதுக்​கியது.

ஒப்​புதலுக்கு அனுப்​பப்​பட்ட நிலை​யில், ஆளுநர் தரப்​பில் இருந்து மசோதா தொடர்​பாக விளக்​கம் கோரப்​பட்​டது. அதற்​கு, அரசு சார்​பில் விளக்​கங்​கள் அளிக்கப்​பட்​டன. அதன்​பின்​னரும், மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்​காத ஆளுநர், கடந்த ஆண்டு மசோ​தாவை திருப்​பியனுப்​பி​னார். இதையடுத்​து, கடந்த அக்​.16-ம் தேதி சட்​டப்​பேர​வை​யில் சித்த மருத்​துவ பல்​கலைக்​கழக மசோதா மீ்ண்​டும் நிறைவேற்​றப்​பட்​டு, ஆளுநரின் ஒப்​புதலுக்​காக அனுப்​பப்​பட்​டது.

அத்​துடன், மசோதா தொடர்​பாக ஆளுநர் தெரி​வித்த கருத்​துகளை ஏற்க மறுத்து பேர​வை​யில் தீர்​மான​மும் நிறைவேற்​றப்​பட்​டது. சட்​டப்​பேர​வை​யில், இரண்​டாவது முறை​யாக நிறைவேற்றி அனுப்​பப்​படும் மசோ​தாவுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்க வேண்​டும் என்ற நிலை​யில், சித்த மருத்​து​வப் பல்​கலைக்​கழக மசோ​தாவை குடியரசுத் தலை​வர் ஒப்​புதலுக்​காக ஆளுநர் அனுப்​பி​யுள்​ளது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>அமைச்சர் மா.சுப்பிரமணியன்</p></div>
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரி தீர்மான கடிதம் - சபாநாயகரிடம் வழங்கிய இண்டியா கூட்டணி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in