அரசு வழங்கும் மடிக்கணினியை மேற்படிப்பு, வேலைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்: அமைச்சர் கோவி.செழியன் வேண்டுகோள்

“உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ், 993 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் சென்னை, விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். த.வேலு எம்எல்ஏ, நல்லி குப்புசாமி, கல்லூரி செயலாளர் சுவாமி தி​யான​காமி​யானந்​தா, முதல்வர் எஸ்.குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ், 993 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் சென்னை, விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். த.வேலு எம்எல்ஏ, நல்லி குப்புசாமி, கல்லூரி செயலாளர் சுவாமி தி​யான​காமி​யானந்​தா, முதல்வர் எஸ்.குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated on
1 min read

சென்னை: ‘அரசு வழங்​கும் மடிக்கணினிகளை மேற்​படிப்​புக்​கும், வேலைக்​கும் மாணவர்​கள் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும்’ என உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​தார்.

சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவே​கானந்தா கல்​லூரி​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில், ‘உல​கம் உங்​கள் கையில்’ திட்​டத்​தின்​கீழ் 993 மாணவர்​களுக்கு மடிக்கணினிகளை அமைச்​சர் கோவி.செழியன் வழங்​கி​னார்.

அப்​போது அவர் பேசி​யதாவது: உயர்​கல்வி மேம்​பாட்​டுக்​காக ‘நான் முதல்​வன்’, ‘புது​மைப்​பெண்’, ‘தமிழ் புதல்​வன்’, ‘உல​கம் உங்​கள் கையில் மடிக்கணினி திட்​டம்’ என பல்​வேறு திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

உலகள​வில் அனைத்து துறை​களி​லும் தமிழக மாணவர்​கள் சிறந்து விளங்க அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்ள இத்​திட்​டங்​களை மாணவர்​கள் முழு​மை​யாகப் பயன்​படுத்தி சாதனை​கள் படைத்து வரு​கின்​றனர்.

இக்​கல்​லூரி​யில் ஏற்​கெனவே, கடந்த மாதம் மூன்​றாம் ஆண்டு இளங்​கலை பயிலும் 1,068 மாணவர்​களுக்கு மடிக்கணினி வழங்​கப்​பட்​டது. தற்​போது இரண்​டாம் ஆண்டு இளங்​கலை பயிலும் 993 மாணவர்​களுக்கு மடிக்கணினி வழங்​கப்​படு​கிறது.

இந்​தக் கல்​லூரி​யில் அரசு திட்​டங்​கள் மூலம் முதல் தலை​முறை பட்​ட​தா​ரி​கள் 10 மாணவர்​கள், ‘தமிழ் புதல்​வன்’ திட்​டத்​தில் 262 பேர், ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் கல்வி உதவித்​தொகை திட்​டத்​தில் 564 பேர், பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோர் கல்வி உதவித்​தொகை திட்​டத்​தில் 643 மாணவர்​கள் பயன்​பெறு​வது மகிழ்ச்சி அளிக்​கிறது.

மாணவர்​கள் தங்​களுக்கு வழங்​கப்​படும் மடிக்கணினிகளை மேற்​படிப்​புக்​கும், வேலை​வாய்ப்​புக்​கும் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும். இவ்​வாறு அமைச்​சர் பேசி​னார். விழா​வில், கல்​லூரி​யின் செய​லா​ளர் சுவாமி தி​யான​காமி​யானந்​தா, முதல்​வர் எஸ்​.குமரேசன் மற்​றும் பேராசிரியர்​கள்​, மாணவர்​கள்​ கலந்​து கொண்​டனர்​.

<div class="paragraphs"><p>“உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ், 993 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் சென்னை, விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். த.வேலு எம்எல்ஏ, நல்லி குப்புசாமி, கல்லூரி செயலாளர் சுவாமி தி​யான​காமி​யானந்​தா, முதல்வர் எஸ்.குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p></div>
வியாசர்பாடியில் 800 ஆண்டு பழமையான இரவீஸ்வரர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in