சீனா வழியாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் தூத்துக்குடி இளைஞருக்கு அமைச்சர் பாராட்டு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: சீனா வழி​யாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் தூத்​துக்​குடி இளைஞர் வெங்கட சுப்பிரமணியன் நல்லசாமிக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

தூத்​துக்​குடி மாவட்​டம் கழுகுமலை கிராமத்தை சேர்ந்​தவர் வெங்கட சுப்​பிரமணி​யன் நல்​ல​சாமி (26). பட்​ட​தா​ரி​யான இவர் உலகின் உயர​மான 3 சிகரங்​களை ஏறி சாதனை படைத்​துள்​ளார்.

ஏற்​கெனவே ஐரோப்​பா​வின் உயர​மான சிகர​மான மவுன்ட் எல்ப்​ரஸ் (5,642 மீட்​டர்), தென் அமெரிக்​கா​வின் உயர​மான சிகர​மான மவுன்ட் அக்​கோன்​காகுவா (6,961 மீ.), ஆப்​பிரிக்​கா​வின் உயர​மான சிகர​மான மவுன்ட் கிளிமஞ்​சாரோ (5,895 மீ.) ஆகிய​வற்​றில் வெற்​றிகர​மாக ஏறி சாதனை படைத்​துள்ள அவர், உலகின் 7 கண்​டங்​களின் மிக உயர​மான சிகரங்​களை தொடு​வது என்ற இலக்கை நோக்​கிப் பயணிக்​கிறார்.

அருணாச்சல பிரதேசத்​தில் உள்ள மலை ஏறு​தல் பயிற்சி நிறு​வனத்​தில், மலை​ஏறு​தல் பயிற்​சியை முடித்​துள்​ளார். தமிழகத்​தைச் சேர்ந்த 4 பேர் இது​வரை எவரெஸ்ட் சிகரத்தை நேபாளம் வழி​யாக ஏறி சாதனை படைத்​துள்​ளனர்.

தற்​போது, வெங்கட சுப்​பிரமணி​யன் நல்​ல​சாமி புதிய முயற்​சி​யாக வரும் ஏப்​ரல் 2-ம் தேதி சீனா வழி​யாகப் பயணித்து எவரெஸ்ட் சிகரத்தை அடை​யத் திட்டமிட்டுள்ளார்.

இந்த மலை​யேற்​றப் பாதை​வழியாக எவரெஸ்ட் சிகரத்​துக்​குச் செல்​லும் முதல் தமிழக வீரர் என்ற பெருமை வெங்கட சுப்​பிரமணி​யன் நல்​ல​சாமிக்கு கிடைத்​துள்​ளது.

அவரை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேரில் அழைத்​துப் பாராட்​டி, வாழ்த்து தெரி​வித்​தார். இளைஞர் வெங்கட சுப்பிரமணியன் நல்லசாமியின் புதிய சாதனை வெற்றிபெற வேண்டும், மேலும் அவர் பல சாதனைகளை புரிய வேண்டும் என்று அமைச்சர் வாழ்த்தினார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in