சாலையோர உணவு விற்பனையை முறைப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: சென்​னை, திருச்​சி, கோவை உள்​ளிட்ட 5 மாவட்டங்களில் சாலை​யோர உணவு விற்​பனையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்று சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் தெரி​வித்​தார்.

சென்னை தேனாம்​பேட்​டை​யில் சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் தலை​மை​யில் உணவு பாது​காப்​புத்​துறை அலுவலர்களு​ட​னான ஆய்​வுக்​கூட்​டம் நேற்று நடந்​தது. கூட்​டம் முடி​வில், அமைச்​சர் அருண்​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது:

அசைவ உணவு விடு​தி​கள், மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் பாது​காப்​பான முறை​யில் உணவு தயாரிப்​பதை உறுதி செய்ய அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. சென்​னை, திருச்​சி, சேலம், கோவை, திருப்​பூர் மாவட்​டங்​களில் சோதனை முறை​யில் தெருக்​களில் ‘ஆரோக்​கிய​மான சுகா​தா​ர​மான உணவு’ திட்​டம் கொண்டு வரப்பட்​டுள்​ளது. இந்த 5 மாவட்​டங்​களில் சாலை​யோர உணவு விற்பனையை முறைப்​படுத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

தெருக்​களில் உணவு கடை நடத்​துபவர்​கள் தரமான சுகாதாரமான உணவு தர வேண்​டும் என்​ப​தற்​காக இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல், உணவக பணியாளர்​களுக்கு டைபாய்டு தடுப்​பூசி போடு​வதற்கு நடவடிக்கை எடுக்​கப்​படும். யூடிபூர்​கள் ‘ஃபுட் ரிவ்​யூ’ குறித்து ஆலோ​சித்து முடிவு எடுக்​கப்​படும்.

குழந்​தைகளுக்​கான தங்க மோ​திரம் திட்​டம் மூலம் அரசு மருத்துவ​மனை​களில் பிரசவம் அதி​கரிக்​கும். திரு​வள்​ளூர் மாவட்டத்​தில் அமோனியா வாயு கசிவு தொடர்​பாக அறிக்கை சமர்ப்​பிக்கப்​பட்​டுள்​ளது. வாயு கசி​வால் இறந்​தவர்​களின் உடல்கள் அரசு செல​வில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்​ளது.

மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்​றும் பணி​யாளர்​கள், பணம் வாங்கி​னால், 104 என்ற எண்​ணில் புகார் அளிக்​கலாம்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
அரசு திரைப்படக் கல்லூரி படிப்பு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in