அவசரம் வேண்டாம் என வைகோவிடம் முறையிட்டு கண்ணீர்: ராஜேந்திரன் எம்எல்ஏ தகவல்

அவசரம் வேண்டாம் என வைகோவிடம் முறையிட்டு கண்ணீர்: ராஜேந்திரன் எம்எல்ஏ தகவல்
Updated on
1 min read

தென்காசி: ​“கட்​சி, சாதி, மதம் கடந்து வெற்றிபெறச் செய்த கடையநல்​லூர் தொகுதி மக்​கள் நாள்​தோறும் என்​னிடம் வெளிப்​படுத்தி வரும் உணர்வை மதித்​தும், வைகோ மீதோ, என் மீதோ களங்​கம் படர்​வதைத் தவிர்க்கும் பொருட்​டும் பதவி வில​கல் என்ற முடிவை மேற்​கொள்ள வேண்​டாம் என்று வைகோவிடம் தெரி​வித்​தேன்” என கடைய நல்​லூர் எம்​எல்ஏ தி.​மு.​ராஜேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கு​வ​தாக சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற மதி​முக பொதுக்​குழு கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில், தென்​காசி மாவட்​டம், கடையநல்​லூர் தொகு​தி​யில், உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட்டு வெற்றிபெற்ற மதி​முக வேட்​பாளர் தி.​மு.ராஜேந்​திரன், முகநூல் பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:மதி​முக அலு​வல​க​மான தாயகத்​தில் ஜூன் 26-ம் தேதி வைகோவை சந்​தித்து பேசினேன். பதவி வில​கல் என்ற முடிவை மேற்​கொள்ள வேண்​டாம் என்று தெரி​வித்​தேன்.

சட்​டப்​பேர​வை​யில் எனது செயல்​பாடு​கள் தகுதி நீக்​கத்​துக்கு வழி​வகுத்​தால் மகிழ்ச்​சி​யுடன் பதவியைத் துறந்து மக்​களிடம் முறை​யிடு​வோம் என்​றும், இப்​போது அவசரம் வேண்​டாம் என்​றும் குறைந்​த​பட்​சம் 6 மாதம் பொறுத்​திருப்​போம் என்​றும் கூறினேன். கூட்​டணி குறித்து எடுக்​கும் முடிவை மதிப்​ப​தாக​வும் இன்​னும் சில பல செய்​தி​களை​யும் வைகோ​விடம் கூறி கண்ணீருடன் முறை​யிட்​டேன்.

அதன் பின்​னர், இரவில் வைகோ​விடம் இருந்து கிடைத்த உத்​தர​வை, பொதுக்​குழு​வில்என்​னால் செயல்​படுத்த இயலாது என்​ப​தால், பொதுக்​குழு​வில் நான் கலந்து கொள்​ள​வில்​லை. 42 ஆண்​டு​களாக வைகோ மீது நான் வைத்​திருக்கும் அன்​பும், விசு​வாச​மும் உண்மையானது. அதே​போல், வாக்​களித்த மக்​கள் பெரு​மைப்​படும் வகை​யில் எனது செயல்​பாடு​கள் இருக்​கும் என்று தொகுதி மக்​களிடம் ஏற்​படுத்தி வைத்​திருக்கும் நம்​பிக்​கை​யும் உண்​மையானது. மீத​முள்ள நம் வாழ்​வில் எவ்​வித களங்​க​மும் சுமக்க வேண்​டாம் என்​பது என் கருத்​து. இந்த கருத்​துகள்​ வைகோ​வின்​ நலனை​யும்​ உள்​ளடக்​கியது.

அவசரம் வேண்டாம் என வைகோவிடம் முறையிட்டு கண்ணீர்: ராஜேந்திரன் எம்எல்ஏ தகவல்
“நேற்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம், ஆனால் இன்று…” - பாக்யராஜ் மறைவு குறித்து சிரஞ்சீவி வேதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in