அரசியல் கட்சிகள் சார்பில் மே தினம் கொண்டாட்டம்: செங்கொடி ஏற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு

அரசியல் கட்சிகள் சார்பில் மே தினம் கொண்டாட்டம்: செங்கொடி ஏற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு
Updated on
2 min read

சென்னை: அரசி​யல் கட்​சிகள் சார்​பில் மே தினம் நேற்று உற்​சாக​மாக கொண்​டாடப்​பட்​டது. கட்சி அலு​வல​கங்​களில் செங்​கொடி ஏற்றி தொழிலா​ளர்​களுக்கு இனிப்பு வழங்​கப்​பட்​டது.

திமுக சார்​பில் மே தின விழா சிந்​தா​திரிப்​பேட்​டை​யில் உள்ள மே தினப் பூங்​கா​வில் கொண்​டாடப்​பட்​டது. இதில் திமுக தலை​வரும் தமிழக முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் கலந்​து​கொண்டு சிறப்​புரை​யாற்​றி​னார்.

முன்​ன​தாக, அங்​குள்ள நினை​வுச் சின்​னத்​தில் மலர் வளை​யம் வைத்து மரி​யாதை செலுத்​தி​னார். இந்​நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, பி.கே.சேகர்​பாபு, மா.சுப்​பிரமணி​யன், சி.​வி.கணேசன், ஆர்​.​ராஜேந்​திரன், மேயர் ஆர்​.பிரி​யா, ஆ.ரா​சா, டி.கே.எஸ்​.இளங்​கோவன், பூச்சி முரு​கன் உள்​ளிட்ட கட்​சி​யின் மூத்த நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் திரளாக கலந்​து​கொண்​டனர். இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில தலைமை அலு​வல​கத்​தில் கட்​சி​யின் தேசிய நிர்​வாகக்​குழு உறுப்​பினர் டி.எம்​.மூர்த்தி தலை​மை​யில் மே தின விழா நடந்​தது.

கட்​சி​யின் முன்​னாள் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன் செங்​கொடியை ஏற்​றி​னார். நிகழ்ச்​சி​யில் மாநில துணைச் செய​லா​ளர் என்​.பெரிய​சாமி, மாநில செயற்​குழு உறுப்​பினர் வகிதா நிஜாம், டாக்​டர் ஜி.ஆர்​.ர​வீந்​திர​நாத் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற மே தின விழா​வில் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக் குழு உறுப்​பினர் ஜி.​ராமகிருஷ்ணன் மே தின செங்​கொடியை ஏற்​றி​னார்.

நிகழ்ச்​சி​யில் மத்​தி​யக் குழு உறுப்​பினர் என்​.குணசேகரன், மாநில செயற்​குழு உறுப்​பினர் கே.​சா​முவேல்​ராஜ், தென்​சென்னை மாவட்​டச் செய​லா​ளர் ஆர்​.வேல்​முரு​கன், மாநிலக் குழு உறுப்​பினர்​கள் பி.சுகந்​தி, வெ.​ராஜசேகர், வில்​சன். கே.சர​வணன், சிந்​தன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

மே தினத்தையொட்டி மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ எழும்​பூரில் உள்ள மதி​முக தலைமை அலு​வல​க​மான தாயகத்​தில் மே தின கொடியேற்றி தொழிலா​ளர்​களுக்கு இனிப்பு வழங்​கி​னார்.

நாம் தமிழர் கட்​சி​யின் தொழிற்​சங்​கப் பேரவை சார்​பில் வளசர​வாக்​கத்​தில் உள்ள கட்​சி​யின் தலைமை அலு​வல​க​மான இராவணன் குடிலில் உழைப்​பாளர் விழா கொண்​டாடப்​பட்​டது.

தமாகா சார்​பில் ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற விழா​வில் கட்​சி​யின் தலை​வர் ஜி.கே.​வாசன் தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​னார்.

அமைப்பு சாரா தொழிலா​ளர் கூட்​டமைப்பு சார்​பில் மெரினா கடற்​கரைச் சாலை​யில் உள்ள உழைப்​பாளர் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தப்​பட்​டது. தொடர்ந்து மே தின உறு​தி​மொழியேற்பு கூட்​டம் நடந்​தது.

தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் வெளி​யிட்ட மே தின வாழ்த்​துச் செய்​தி​யில், ``சமதர்​மம், சமூகநீ​தி, சமத்​து​வம் அடிப்​படை​யில் உண்​மை​யில் உழைப்​போருக்கு இந்த ஜனநாயக நாட்​டில் உரிய மரி​யாதை​யும், அங்​கீ​கார​மும் கிடைக்க வேண்​டும்'' என்று கூறி​யுள்​ளார்.

அதே​போல், மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலை​வர் கமல்​ஹாசன் வெளி​யிட்​டுள்ள வாழ்த்​துச் செய்​தி​யில், ``காடு திருத்தி நாடாக்​கியது உழைப்​பு, உண்​ணத் தந்து உயிர்​கொடுப்​பது உழைப்​பு, உலக மாந்​தரை ஒன்​றாக்​கியது உழைப்​பு, உழைப்பு இல்​லை​யேல் உயிர் இல்லை உயர்​வில்லை உழைப்​பையே மூச்​சாய்​ கொண்​ட உழைப்​பாளருக்​கு என்​ வணக்​கம்​'' என்​று குறிப்​பிட்​டுள்​ளார்​.

அரசியல் கட்சிகள் சார்பில் மே தினம் கொண்டாட்டம்: செங்கொடி ஏற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு
புறம்போக்கு நிலத்தில் உள்ள கட்டுமானங்களை இடிக்கக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in