ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
Updated on
1 min read

மதுரை: தமிழகத்​தில் ஒப்​பந்த செவிலியர்​களுக்​கும் ஊதி​யத்​துடன் மகப்பேறு விடுப்பு வழங்க அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் அரசு தெரி​வித்​துள்​ளது.

மதுரை ஊமச்​சிகுளத்​தைச் சேர்ந்​தவர் நந்​தினி. இவர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: துறையூர் ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் மத்​திய சுகா​தா​ரத் திட்​டத்​தின்​கீழ் ஒப்​பந்த செவிலிய​ராக பணிபுரிந்து வருகிறேன். அரசு ஊழிய​ரான எனக்கு மகப்​பேறுக்​காக 270 நாட்​கள் விடுப்பு வழங்க வேண்​டும் என்ற விதி​முறை உள்​ளது. இருப்​பினும், எனக்கு 270 நாட்​கள் விடு​முறை வழங்​க​வில்​லை.

எனவே அரசு ஊழியர் மகப்​பேறு விடு​முறை தொடர்​பான அரசாணை அடிப்​படை​யில் விடு​முறை வழங்க அரசுக்கு உத்​தர​விடக் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தேன். இம்​மனுவை தனி நீதிபதி விசா​ரித்​து, எனக்கு 270 நாட்​கள் ஊதி​யத்​துடன் மகப்​பேறு விடு​முறை வழங்க உத்​தர​விட்​டார். இந்த உத்​தரவை ரத்து செய்​யக் கோரி சுகா​தா​ரத் ​துறை செயலர் தரப்​பில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்டது.

இதனை நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்வு விசா​ரித்​தது. மனு​தாரர் தரப்​பில் வழக்​கறிஞர் ஆர்​.கருணாநிதி வாதிட்டார்.அப்போது அரசு தரப்பில், ஒப்​பந்த முறை​யில் பணி​யாற்​றும் செவிலியர்​களுக்​கும் 6 மாதம் விடுப்பு தர அரசாணை பிறப்பிக்​கப்​பட்​டுள்ள​தாக தெரிவிக்கப்பட்​டது. இதையடுத்து வழக்கைமுடித்து வைத்து நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
“அடிமைகள் தமிழ்நாட்டை ஆளக் கூடாது” - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in